உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம் அறிந்த தமிழறிஞர். மாணவர், இளைஞர், மற்றவர் என்று அனைத்துத் தரப்பினர்க்கும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர். தமிழ் என்றது தமிழத்தை. அறிஞர்க்கும் அவரது நூல்கள் தேனடைகள். வள்ளுவத்தை வாழ்வியலாக்கித் தமிழியத்தைத் தழைத் தோங்கச் செய்பவர்.

.

ஐம்பத்தெந்து ஆண்டுகளாக

அரும்பணியாற்றி

எண்பதில் நுழையும் இளைஞர்; ஓய்வறியா உழைப்பாளர். தமிழால் அவரும் அவரால் தமிழும் வளர்வது நம் பெருமை. தமிழுக்கு எத்தனை முகங்கள். ஆயிரம் முகங்களில் ஐயா ஒருமுகம்; தமிழ் வளர்க்கும் திருமுகம், தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவரே அவரைப் ‘புல்' என்றாலும் அவர் புல் அல்லர்; புலி, தமிழ்ப்புலி இலக்கியப் புலி; இலக்கணப் புலி.

தமிழர் பற்ற வேண்டிய புளியங்கொம்பு இளவழகன் பற்றியுள்ளார். தமிழ்மண் செழிக்கும்!

வளவன் பதிப்பகம்

- ந. அரணமுறுவல்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர்

+6016060-600 017