உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

35

தீயவர்கள் சேர்க்கை, சூது, கள், சாராயக் குடி வகைகள் இவையே அவனுக்கு இன்பமாயின. எப்பொழுது பார்த்தாலும் இவற்றுள் ஒன்றில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியாது. அப்படிப் பழகி விட்டான்.

"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.

என்னும் குறள் நெறி அவன் செவியில் விழ வாய்ப்பே இல்லை. அப்படியே விழுந்தாலும் அதனைச் சொல்லியவனைச் 'சும்மா' விடப் போவதுமில்லை. அவன் பரம்பரையையே சந்திக்கு இழுத்து விடுவான்.

ஒரு நாள் மணிமுத்து ஒருவன் தோட்டத்திற்குப் போய்த் தேங்காய்கள் சில பறித்தான். பறிக்கும்போது தோட்டக்காரன் கண்டு விட்டான். அவனுக்குக் கோபம் மிகுதியாயிற்று. தூரத்தி லிருந்து வரும்போதே கத்தினான். பக்கத்தில் வந்தபோது மணிமுத்தைப் பார்த்ததும் 'என் திட்டினோம்' என்று பதறிப் று போனான். மெதுவான குரலில் "மணிமுத்து, இறங்கு கீழே! இப்படியா செய்வது? ஆளில்லாத வேளையில் இப்படிக் காயை வெட்டுவது உனக்கே நன்றாக இருக்கிறதா? வா, உன் அப்பா வினிடமே கேட்கலாம் என்று அழைத்துச் சென்றான். தோட்டக்காரன் நடந்து கொண்ட அளவு ஒருவன் பொறுமை யாக நடந்திருக்க முடியாது. இத்தோட்டக்காரனும் மூக்கன் மகன் மணிமுத்து தவிர்த்து இன்னொருவனிடம் இப்படி நடந்திருப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது.

""

மூக்கன் தோட்டக்காரனுக்கு என்ன பரிசு தந்தான்? "நீ திருட்டுப் பயல்; உன் அப்பன் திருட்டுப் பயல்; உன் பாட்டன் திருட்டுப் பயல்; உன் பரம்பரையே கொள்ளைக் கூட்டம். ஒரு பயலிடம் யோக்கியதை உண்டா? தோட்டம் வைத்திருக் கிறானாம் தோட்டம். இவன் ஒருவனுக்குத்தான் அதிசயமாகத் தோட்டம் இருப்பது போலே! ஏய், நீ பிச்சைக்காரப் பயல்; இந்தச் சின்னப்பயல் தெரியாமல் தேங்காயைப் பறித்ததற்குக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயே - நீ செய்வதைச் செய்! அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தான்” என்றான்.கூட்டம் திரண்டு விட்டது. கூடியவர்களும் "தோட்டக் காரன் இதனை இவ்வளவு பெரிது பண்ணியிருக்க வேண்டாம் என்று ஒத்த முடிவு கூறினர். "தோட்டக்காரன் என்ன செய்வான்? வாயை மூடிக்கொண்டு போனான். இத்தகைய மூக்கனின்