அணி
433
சத்துவமென்பன - வெண்பளிங்கிற் செந்நூல் கோத்தால் அதன் செம்மை புறத்தே தோன்றுமாறுபோல உள்ளங்கருதியது புலனாக்குங்குணங்கள்; அக்குணங்களானவை, சொற்றளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் நிகழ்ச்சி, மெய்விதிர்ப்பு, மெய் விதும்பல், மெய்ம்மயிரரும்பல் முதலியன.
எடு :-
66
'கல்லுயர்தோட் கிள்ளி பரிதொழுது கண்பனிசேர்
மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று - சொல்லுவரால்
பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள்சேர்ந்
தெங்கண் கலுழ்ந்தனவா லென்று.
இலேசவணி (இ)
ஒன்றனைப் புகழ்ந்தாற் போலப் பழித்துக் கூறுதலும், பழித் தாற்போலப் புகழ்ந்து கூறுதலும் ஆகிய இவ்விரண்டும் இலேச வணியின் பாற்படும்.
எடு :-
“மேய கலவி விளைபொழுது நம்மெல்லன்
சாய றளராமற் றாங்குமால் - சேயிழாய்!
போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித்
தார்வேட்ட தோள்விடலை தான்”
இதில், புணர்ச்சிக் காலத்து அறிவழியா மையாற் பழிப் பாயிற்று.
66
ஆடன் மயிலியலி யன்ப னணியாகம்
கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான் - ஊடல்
இளிவந்த செய்கை யிரவாளன் யார்க்கும்
விளிவந்த வேட்கை யிலன்
புணர்ச்சிக் காலத்து அறிவு அழிந்தமையாற் புகழாயிற்று.
இறையணி
வினாவிற்கு விடையிறுக்குங்காலத்து அவ்விடையில் ஓர் உட்கருத்து வரத்தொடுப்பது இறையணியாகும். (இறை - விடை.) எடு :-
வழிக்கொண் மன்ன சிலைமய மாகுமிவ்
வுழிச்சிற் றூரிலொ ருவரு மில்லையால்