இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குழந்தை வினை
சிந்தை கவர் ஒவியங்கள்;
செயல் மிக்க சிற்பங்கள்;
கந்தங் கமழுகின்ற
காமன்மகிழ் பள்ளியறை:
நளபாகத் தறுசுவையில்
நல்ல நல்ல உண்டிவகை:
அளகா புரியது போல்
அளவற்ற செல்வங்கள்;
காலுக்குச் சோடு; நல்ல
காசி நகர்ப் பட்டுடைகள்:
மேலுக்குப் பொன்னணிகள்:
விதவிதமாய்ச்சுண்ணங்கள்:
இவை யெல்லாம் கற்பனைசெய்;
தின்பமிகப் பெறுவாரோ?
இவையனைத்தும் கற்பிக்க
எவ்வாறறிந்திடுவார்?
கனவுலகிற் காண்பதற்கும்
கருத்திலவை வேணுமன்றோ?
மனக் கோட்டை கட்டுதற்கும்
வகையறியா ஏழ்மையினர்!
இடிந்த சுவர் விழுகூரை
எறும்புவளை பழங் கஞ்சி
மடிந்த வால் பன்றியலால்
மற்றென்ன கண்டுள்ளார்?
21