பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 43 வாசு உன் பங்களாவிற்குள் அவர்கள் எப்படி நுழைய முடியும்? நீதான் பங்களாவை வெளியில் பூட்டி வைத்திருக்கிருயே! இன்ஸ்பெக்டர் : சோமு, எங்களை உள்ளே வைத்து விட்டு வெளியே சென்று எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட் டீர்கள். பிறகு நீங்கள் எப்படி உள்ளே வர முடிந்தது? சோமு : பின்புறம் உள்ள ஒரு கதவை மட்டும் இரண்டு பக்கத்திலிருந்தும் பூட்டலாம். அந்த மாதிரி பூட்டு வைத்திருக்கிறேன். அதன் வழியாக உள்ளே வந்து வெளியிலிருந்து பூட்டியது போலவே பூட்டி விட்டேன். வாசு ; அது சரியடா, நீதான் இந்தத் தந்திரம் செய்து உள்ளே வந்துவிட்டாய். ராகவனும் சரோஜினியும் எப்படி உள்ளே வரமுடியும்? சோமு : இந்த பங்களாவுக்கு சரோஜினியிடம் சாவியிருக் கிறது. அவள் நினைத்தால் எந்த அறைக்குள் வேண்டுமானலும் நுழையலாம். வாசு : இதென்னடா ? இது இன்னும் வேடிக்கையாக இருக்கிறதே? உன்னுடைய பங்களாவுக்கு அவளிடம் சாவி எப்படி இருக்கும்? சோமு ; அதைப்பற்றி யெல்லாம் இப்பொழுது எதற்குக் கேட்கிருய்? நான் சொல்லுகிறபடி இன்னும் ஒரு மணி நேரம் கேளேன். வாசு ; அடே, எத்தனை மணி நேரமானலும் நான் இங்கே அடைபட்டுக் கிடக்கத் தயார். ஆனல்