பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

எதிரோலி

எண்கள் தேவைப்பட்டன. அவற்றைக் குறித்துவைக்க விழைந்தபோது எண் குறியீடுகளைக் கண்டறிய வேண்டிய அவசிய, அவசரத் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாக உருவாக்கப்பட்டவைகளே எண் குறியீடுகள். அக்குறியீடுகளின் வளர்ச்சியே இன்றைய எண்கள்.

ஆரம்ப காலத்தில் உலகெங்கும் வாழ்ந்த மக்கள் அந்தந்த நாடுகளின் இயல்புக்கும் மக்களின் வாழ்க்கைப் போக்குக்குமேற்ப வெவ்வேறு வகையான தனித்தனிக் குறியீடுகளைக் கண்டறிந்து பயன்படுத்தினர். எகிப்தியர் ஒன்று முதல் பத்துவரையிலான எண்களைக் குறிக்க நேர்கோடுகளைப் பயன்படுத்தினர். பத்திற்கு மேற்பட்ட நூறு. ஆயிரம், பத்தாயிரம் போன்ற பெரும் எண்ணிக்கைகளைக் குறிக்கத் தனிக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்

தமிழ் உட்பட பண்டைய மொழிகளில் எண்கள்

டன. இவ்வாறே ரோமானியர்களும் தனித்தனிக் குறியீடுகளைப் பயன்படுத்தினர். கிரேக்கர்களும் தமிழர்களும் தத்தம் மொழிகளின் எழுத்துக்களின் அடிப்படையிலேயே எண் குறியீடுகளையும் பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையிலான எண் குறியீடுகளைக் கொண்டு பெருக்கல் கூட்டல் வகுத்தல் போன்ற கணிப்புக் கணக்குகளைப் போடுவது எளிதல்ல.

உலகில் கண்டறியப்பட்ட பழங்காலக் கணித எண் குறியீடுகளிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது இந்தியாவில் கண்டறியப்பட்ட எண் குறியீடுகளே யாகும். ஒன்று முதல் பத்து வரையிலான 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற குறியீடுகளே அவை. இக்குறியீடுகளிலேயே மிகச் சிறந்த குறியீடாகக் கருதப்படுவது ‘0’ என்ற குறியீடேயாகும். இந்தக் குறியீட்டை எந்தக் குறியீட்டுடன் சேர்த்தாலும் அவ்வெண்ணின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். இந்த எண் குறியீடுகளை அராபியர்கள் கற்று, இதனை ஐரோப்பாவெங்கும் சென்று பரப்பினர். ஐரோப்பியர்கள் உலகெங்கும் சென்று பரப்ப, இன்று இந்த எண் குறியீடுகளே உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒன்றுக்குக் குறைந்த பின்னங்களைக் குறிக்கத் தனி எண் குறியீடுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. அவை காணி,அரைக்காணி, முந்திரி என வழங்கப்பட்டு வந்தன. இன்று அவை புழக்கத்திலிருந்து மறைந்து வருகின்றன. இந்தோ, அராபிய, ஐரோப்பிய எண் குறியீடுகளாகிய எண் முறைகளே இன்று உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எதிரொலி : ஒளிக்கதிர் கண்ணாடி மீதுபட்டு மீண்டும் ஒளிவந்த திசையை நோக்கிச் சென்றால் அதை 'ஒளி பிரதிபலிப்பு' என்கிறோம். அதே போன்று நாம் எழுப்பும் ஒலியானது பொருள்களின் மீது பட்டு மீண்டும் நம்மையே வந்தடைந்தால் அதை எதிரொலி என்று அழைக்கிறோம். இது சுவற்றின் மீது அடிக்கும் பந்து மீண்டும் நம்மையே வந்தடைவது போன்றதாகும். பெரும் கட்டிடங்கள், குகைகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் உரத்த எதிரொலியைக் கேட்க முடியும்.

ஒலியை விட எதிரொலி வலு குறைந்ததாகும். ஒலி மலை மீது ஒலித்துத் திரும்பும்போது பல பொருட்களின் மீது மோதித் திரும்புகிறது. இவ்வாறு மோதும் பொருட்களிலிருந்து எதிரொலி வரும். இவ்வாறு எழும் எதிரொலிகளுக் கிடையே போதிய இடைவெளி இருக்கும். இவ்வாறு ஒரே எதிரொலி பலமுறை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இதுபோன்று தான் இடியோசை எழும்போதும் பல பொருட்களில் ஒலி மோதித் திரும்புவதால் இடியோசையைப் பல முறை கேட்க நேர்கின்றது.

சுமார் 20 மீட்டர் இடைவெளி இருந்தால்தான் எதிரொலியைக் கேட்க முடியும். இதற்குக் குறைவான இடைவெளியில் எழும் எதிரொலி வலுகுறைந்ததாக இருப்பதால் விரைவாக எழுந்து நாம் எழுப்பும் ஒலியோடு இரண்டறக் கலந்து மறைந்து விடும். இதனால் தனித்த எதிரொலியாகக் கேட்க முடிவ தில்லை.

சாதாரணமாக நாம் எழுப்பும் ஒலியானது விநாடிக்கு 30மீட்டர் தொலைவு வரை செல்