பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொலைபேசி

177

பெற்றது. இதன் பயன்பாடு உலகெங்கும் விரைந்து பரவியது.

தொலைநோக்கியைக் கொண்டு தூரத்தில் உள்ள நிலவுலகப் பொருட்களை மட்டும் அருகாகக் காண்பதோடு அமையாது. கண்னுக்கெட்டா நெடுந்தொலைவில் உள்ள கோள்களை ஆராயும் வகையில் செயல்பட்டவர் வானவியல் அறிஞர் கலிலியோ ஆவார். இதற்கான தொலைநோக்கிக் கருவிக்கான ஆற்றலுள்ள கண்ணாடி வில்லைகளைக் கண்டுபிடிப்பதிலும் தொலைநோக்கிக் கருவியை வடிவமைப்பதிலும் பெருங்கவனம் செலுத்தினார். அதில் பெரும் வெற்றியும் பெற்றார். முதன்முதலாக வானத்தில் சந்திரனின் மேற்பரப்பையும் அங்கே காணப்பட்ட மலைகளையும் பெருங்குழிகளையும் தொலை நோக்கி மூலம் கண்ணால் கண்டு உலகுக்கு உணர்த்தினார்.சூரியனின் கரும்புள்ளிகளையும் சனிக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள வளையத்தையும் பற்றி முதன்முதலில் கண்டறிந்து கூறியவரும் இவரே ஆவார்.

தொலைநோக்கிகளில் இருவகைகள் உள்ளன. ஒன்று லென்ஸ்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இஃது ஒளி விலகும் தொலைநோக்கி எனப்படும். மற்றொன்று லென்ஸ்களுக்குப் பதிலாக ஆடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கருவியாகும். இது 'பிரதிபலிக்கும் தொலை நோக்கி’ என அழைக்கப்படுகிறது.

தொலை நோக்கிக் கருவியில் கேமெரா பொருத்தப்பட்டால் அஃது தொலை தூரக்காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. நம் கண்களுக்கு எளிதில் புலனாகாத நட்சத் திரங்களைக்கூட இத்தகைய தொலைநோக்கிகளோடு பொருத்தப்பட்ட கேமெராக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாம் சாதாரணமாகக் கையாளும் படப்பிடிப்புக் காமெரா விரைந்து பிம்பங்களைப் பதிவு செய்கிறது. ஆனால் தொலைநோக்கியோடு இணைந்த காமெராக்கள் தொலைவைப் பொறுத்து பிம்பங்களை நீண்ட நேரம் பதிவு செய்து படம்பிடிக்கிறது. வானவியல் ஆய்வின் தொலைநோக்கிகளின் பங்கு அளவிடற்கரியதாகும்.


தொலைபேசி : 'டெலிபோன்' எனப்படும் தொலைபேசி இன்றைய நவீன வாழ்வின் பேரங்கமாக அமைந்துள்ளது எனலாம். தொலைவில் உள்ளவர்களுடன் விரும்பிய

தொலைபேசிக் கருவியின் உட்புறம்

நேரத்தில் பேசப் பயன்படும் இக்கருவி அறிவியல் தந்த அருஞ் செல்வமாகும்.

நாம் இக்கருவி மூலம் பேசும் பேச்சொலி ஒலி அலைகளாக்கப்பட்டு, பின் மின்சக்தியாக மாற்றப்படுகிறது. மின் கம்பி வழியாக வரும் மின் சக்தி நீண்டதூரம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு வரும் மின் சக்தி மறுமுனையில் மீண்டும் ஒலி அலைகளாக மாற்றப்பட்டு,

தொலைபேசி இயங்கும் முறை

பேச்சொலி முழுமையாக கேட்கப்படுகின்றது. இதுவே தொலைபேசியின் செயற்பாடு.

தொலைபேசிக் கருவியை முதன்முதலில் கண்டறிந்தவர் அலெக்ஸாண்டர்கிரஹாம்பெல் எனும் அமெரிக்க அறிவியல் அறிஞராவார். அவர் 1876ஆம் ஆண்டில் இதைக் கண்டு பிடித்தார்.

தரைப்பகுதியில் கம்பிகள் மூலம் தொலைபேசி செய்தி அனுப்பப்படுவது போன்றே கடலடியில் போடப்பட்டுள்ள கம்பி வடங்கள்

12