பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரியம்மை

225

பெட்ரோல் அதிக அளவில் கிடைக்கும் நாடுகளில் அரேபியா, ஃபிரான்ஸ், ஈராக், அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, காமன்வெல்த் நாடுகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். வளைகுடா நாட்டின் பகுதிகளிலும் இந்தியாவில் பம்பாய் கடற்பகுதிகளிலும் பெட்ரோலிய எண்ணெய் கிடைக்கிறது. இந்தியாவில் அஸ்ஸாம், குஜராத், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரிப்படுகைகளிலும் காவேரிப் படுகைகளிலும் பெட்ரோல் கிடைக்கிறது. தொடர்ந்து பெட்ரோல் ஊற்றுக்களைக் கண்டறியவும் முயற்சி நடைபெற்று வருகிறது.

பெட்ரோலியத்தில் கணக்கற்ற கரிமச் சேர்மங்கள் அடங்கியுள்ளன. இவற்றினை ‘பின்னமாக்கி காய்ச்சி வடித்தல்’ (Fractional distillation) முறையில் பிரித்தெடுக்கின்றனர். இம் முறையில் கிடைக்கப் பெறும் பொருட்களாகிய, பாரபின், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் மிகவும் பயனுள்ள பொருட்களாகும்.


பெரி - பெரி : உயிர்ச் சத்தாகிய வைட்டமின் ‘பி1’ (B1) குறைவால் உண்டாகும் ஒருவகை நோயாகும். உடலுக்குப் பலவீனத்தை உண்டாக்கும் இந்நோயாளியால் விரைந்து செயல்படவோ நடக்கவோ இயலாது. சோகை நோயும் பக்கவாத நோயும் தாக்க வாய்ப்பேற்படும். நாளடைவில் நரம்பு மண்டலப் பாதிப்பும் உண்டாகும்.

இந்நோய் அரிசி உணவை அதிகம் உண்ணும் மக்களையே பெரிதும் பீடிக்கிறது. காரணம், இயற்கையாக அரிசித் தோலில் வைட்டமின் ‘பி’ உயிர்ச் சத்து அமைந்துள்ளது. பச்சரிசி பெற வேண்டி நெல்லை வேகவைக்காமல் மில்லில் அரைக்கும்போது வைட்ட மின் 'பி’ முழுமையாக அரைபட்டு தவிட்டுடன் போய்விடுகிறது. இந்த அரிசியைத் தொடர்ந்து சமைத்து உண்பதால் வைட்டமின் 'பி' குறைவு ஏற்பட்டு பெரி-பெரி வருகிறது. நெல்லைப் புழுங்கவைத்துப் பெறும் புழுங்கல் அரிசியோ அன்றி கைக்குத்தல் அரிசியோ உண்போருக்கு இந்நோய் வருவதில்லை.

வைட்டபின் 'பி' குறைவால் பெல்லக்ரா எனும் நோயும் ஏற்படுவதுண்டு. இந்நோய் வந்தோருக்குப் பசிக்காது; நாக்கிலும் வாயிலும் புண் உண்டாகும். நீண்ட நேரம் வெயில் பட நேர்ந்தால் உடல் தோல் சிவப்பாகத் தோற்றமளிக்கும். குறிப்பாக இந்நோய் கண்டவரின் வாய் ஓரங்களில் வெடிப்பும் அதனால் புண்ணும் உண்டாகும்.

வைட்டமின் ‘பி’ குறைவால் இந்நோய்களின் பாதிப்புக்குள்ளானோர் வைட்டமின் ‘பி'யை ஊசிமூலம் செலுத்திக் கொண்டால் நோயினின்றும் விடுபடலாம்.


பெரியம்மை ; இதற்கு 'வைசூரி’ என்ற வேறொரு பெயரும் உண்டு. இது ஒரு கொடிய தொற்று நோயாகும். இந்நோயின் அறிகுறியாகக் காய்ச்சலும் அதைத் தொடர்ந்து முத்துக்கள் போன்ற நீர்க் கொப்புளங்களும் உடலெங்கும் தோன்றும். இந்நோய் இளையோர் முதல் முதியோர்வரை எல்லாப் பருவத்தினரையும் பீடிக்கும். நாடு, இன, நிற பேதமின்றி மனிதர்கள் யாரையும் இந்நோய் தாக்கும். அதிலும் வெப்ப மண்டல நாடுகளில் வாழும் மக்களை இந்நோய் பெரிதும் பீடிக்கிறது.

பெரியம்மைக் கொப்புளங்கள்

சாதாரணமாக அம்மைக் கிருமிகள் இரத்தத்தின் மூலம் விரைந்து உடலெங்கும் பரவுகின்றன. சில சமயம் இரத்தத்தின்மூலம் கருவி-

15