பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அண்டவெளி

ஒரு தட்டைச் சுற்றி பாம்பு படுத்திருப்பது போலக் காணப்படும். இதன் விட்டம் சுமார் 6 இலட்சம் ஒளியாண்டுகள் ஆகும். சூரியன் இதன் மையத்திலிருந்து சுமார் 30,000 ஒளியாண்டு தொலைவிலிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். பூமிக்கும் பால்வீதி மண்டலத்திற்குமிடையேயுள்ள தூரம் சுமார் 20 இலட்சம் ஒளியாண்டுகளாகும். இத்தூரத்தைக் கிலோ மீட்டரில் அளக்க இயலாது.

பெரு வெடிப்பின் விளைவாகப் பேரண்டத்திலிருந்து வெடித்துச் சிதறிய பிற நட்சத்திரங்களைப் போல உருவானதே சூரியன். இஃது எல்லா நட்சத்திரங்களையும்விட பூமிக்கச்சமீபமாக இருப்பதால் அதனைச் சூரியன் என்று அழைக்கிறோம். சூரியனில் காணப்படுவது போன்ற வெப்பமும் ஒளியும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் உண்டு. இவை எண்ணற்ற கி.மீ. உயரத்தில் மிக நீண்ட தொலைவுக்கப்பால் இருப்பதால் சிறியவைகளாகக் காட்சியளிக்கின்றன.

சூரியனைச் சுற்றிலும் புதன் (மெர்க்குரி), சுக்கிரன் (வீனஸ்), பூமி, செவ்வாய் (மார்ஸ்), குரு (ஜூபிடர்), சனி (சாட்டர்ன்) யுரெனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றுள் யுரெனஸ் நெப்டியூன், புளுட்டோ ஆகிய மூன்று கிரகங்களும் மிகச் சிறியவையாகும்,

புதன் வெள்ளி பூமி செல்வாய் துணைகோள்கள் வியாழன் யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ

சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களுக்கும் சுய ஒளித்தன்மை உண்டு. ஆனால், கிரகங்களுக்கு அத்தன்மை அறவே இல்லை. அவை சூரிய ஒளியைப் பெற்று அதைப் பிரதி பலிக்கின்றன.

சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரன் பூமியின் ஒரு துணைக் கோளாகும். இஃது பூமியிலிருந்து பிரிந்து சென்று தனிக் கிரகமாக உருவெடுத்தமையால் இது பூமியைச் சுற்றி வரும் இயல்புடையதாயமைந்துள்ளது. சந்திரன் பூமியைச் சுற்றியபடியே பூமியோடு சேர்ந்து சூரியனையும் சுற்றி வருகிறது.

இந்த உண்மைகளை முதன் முதலாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கண்டுபிடித்து உலகத்துக்குக் கூறியவர் போலந்து நாட்டு விஞ்ஞானியான கோப்பர்நிக்கஸ் என்பவராவார். இவர்தான் பூமி ஒரு கிரகம் என்றும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகிறது. என்றும் கூறி, அதுவரை உலகம் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளையெல்லாம் போக்கினார்.

பூமி தன்னைத்தானே ஒரு நாளைக்கு ஒரு முறை சுற்றிக் கொண்டுள்ளது. ஆயினும், அது நமக்குத் தெரிவதில்லை. பூமி, தட்டையாக அமைந்திருப்பது போலவும் அதுவும் அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போலவும் தோன்றுகிறது. அதே சமயத்தில் சந்திரன் முதலான மற்ற கிரகங்கள் நம்மைச் சுற்றி வருவது போலவும் தோன்றுகிறது. இதை ஒரு உதாரண நிகழ்ச்சி மூலம் நன்கு உணரலாம்.

நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ரெயிலின் வேகத்திற்கேற்ப நம் முன் காட்சியளிக்கும் மரங்கள், மலைக்குன்றுகள், வயல்கள் அனைத்தும் நமக்கு எதிர்த் திசையில் விரைந்து ஓடுவதைப் போல் காட்சி தரும். இதே முறையில் தான் கிரகங்களும் நம்மைச் சுற்றி வருவது போல் தோற்றமளிக்கின்றன.

அண்ட வெளியிலுள்ள நட்சத்திரங்கள், சூரிய மண்டலத்திலுள்ள சந்திரன் முதலான கிரகங்கள் அனைத்தையும் காண மாபெரும் தொலைநோக்காடிகள் இன்று பயன்பட்டு வரு