பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்குப் பெரிதும் பயன்படக்கூடிய அறிவியல் களஞ்சியம் உருவாக்கி வெளிவிடுவதன்மூலம் தமிழில் 'சிறுவர் அறிவியல் களஞ்சியம்' இல்லை என்ற குறையை நீக்கவேண்டும் என்ற மனவுணர்வு எனக்குப் பல்லாண்டுகளாகவே இருந்து வந்தது. சிறுவர்கட்கு மட்டுமல்லாது ஆரம்பப் பள்ளியோடு அல்லது நடுநிலைப் பள்ளிப் படிப்போடு படிப்பை விட்டு விட்டவருக்கும், அறிவியல் செய்திகளை மேன்மேலும் அறிந்துகொள்ளவேண்டும் எனும் வேட்கை கொண்ட இளையர், பெரியவர்கட்கும் பயன்படத்தக்க ஒரு ஒரு 'மினி' அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கி அறிவியல் வேட்கை கொண்டவர்களின் அறிவுப் பசியைப் போக்க வேண்டுமென விழைந்தேன். அவ்விழைவின் பயனாக உருவானதுதான் உங்கள் கரங்களில் இப்போது தவழ்ந்து கொண்டிருக்கும். ‘இளையர் அறிவியல் களஞ்சியம்’ எனும் இந்நூல்.

முன்பு 'சிறுவர் கலைக்களஞ்சியம்’ எனும் பெயரில் ஒரு 'மினி’ கலைக்களஞ்சியத்தைச் சிறுவர்களுக்கென உருவாக்கி வெளியிட்டேன். அப்போது எனக்குக் கிடைத்த பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு இந்த அறிவியல் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளேன். சிறுவர்கள், படிப்பை பாதியில் விட்ட இளைஞர்கள் ஆகியோரை மனதிற்கொண்டு, அவர்கட்குள்ள சொல்லாட்சித் திறனையும் அறிவியலைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் கருத்திற்கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. எளிய சொற்களைக் கொண்டு, சிறு சிறு சொற்றொடர்கள்மூலம் ஏராளமான படங்களோடு அறிவியல் செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை படிப்போருக்கு மிக எளிதாக விளங்கவும், அவை படிப்போர் மனதுள் சென்று தங்கவும் பேருதவியாயமையும் என்பது திண்ணம்.

முந்தைய களஞ்சியங்கள் பலவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இக் களஞ்சியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அறிவியல் கட்டுரைகளை என் முப்பதாண்டு அறிவியல் பட்டறிவின் அடிப்படையில் எழுதியிருப்பினும் அவ்வத்துறை வல்லுநர்கள் கட்டுரைகளைப் பார்வையிட்டு, மாற்ற திருத்தங்கள் செய்த பின்னரே அச்சு வாகனமேறின. இப்பணி செவ்வனே நிறைவேற உறுதுணை புரிந்த வல்லுநர்களை அண்ணா பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரி இயற்பியல் துறை துணைப்பேராசிரியர் டாக்டர் மு. ஆறுமுகம் அவர்கட்கும், சென்னை மாநிலக் கல்லூரி வேதியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் வ. பாலசுப்பிரமணியன் அவர்கட்கும் டாக்டர் மு. வ. அவர்களின் தலைமகனும் மு. வ. மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் வ. தி அரசு அவர்கட்கும் நாடறிந்த மருத்துவ எழுத்தாளர் ராஜபாளையம் டாக்டர் கு. கணேசன் அவர்கட்டும் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குநர் திரு இரா. நடராசன் அவர்கட்கும் நான் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுள்