பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113


இக் காலகட்டத்தில் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

பாண்டிய நாட்டைப் பொறுத்தவரை தலைமையமைச்சர் ஒரு முஸ்லிம் படைத் தளபதி மட்டுமல்ல, படை வீரர்களில் பல்லாயிரவர் முஸ்லிம்கள் என்ற நப்பாசையில் இப்படையெடுப்பை மேற்கொள்ள விழைந்தான்.

இவ்வுணர்வின் அடிப்படையில் சையித் தகிய்யுத் தீனுக்கு ஒரு இரகசியக் கடிதம் அனுப்பினான் மாலிக்கபூர். அதில், தாம் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையைத் தாக்கப் போவதாகவும் அதில் முஸ்லிம் என்ற முறையில் போரிடாமல் முஸ்லிம் வீரர்களோடு ஒதுங்கியிருக்கு மாறும் வேண்டி கடிதம் அனுப்பியிருந்தான். இதைப் பெற்று, கடுங்கோபம் கொண்ட சையித் தகிய்யுத்தீன் உடனே மறுமொழியாக, “நாங்கள் பாண்டிய நாட்டின் குடிமக்கள். இந்நாட்டு உப்பைத் தின்று வளர்ந்த நாங்கள் எக்காரணம் கொண்டும் இம்மண்ணுக்குக் கடுகளவும் துரோகமிழைக்க மாட்டோம். நாங்கள் உங்கள் படையைப் போர்க் களத்தில் சந்திக்கத் தயாராக உள்ளோம்” என்று சூளுரைத்துக் கடிதம் எழுதியதோடு படையெடுத்து வந்த மாலிக்கபூரின் படையை எதிர்த்து உக்கிரமாகப் போர்புரிந்தனர் முஸ்லிம்கள் என்பது வரலாறு.

இவ்வாறு முஸ்லிம்கள் எந்த மண்ணில் வாழ்கிறார்களோ அந்த மண்ணுக்கு நன்றியுள்ளவர்களாக, அங்கு ஏற்படும் வெற்றி தோல்விகளைத் தங்கள் வெற்றி தோல்விகளாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது தான் வரலாற்றுச் செய்தி.

அழிக்கத் தூண்டிய உட்குழுப் பூசல்

பைஸாந்தியப் பேரரசு ஆட்சியானது கிருஸ்தவ ஆட்சியாயினும் சமய உட்குழுப் பற்றுடையவர்களின்

8