பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் வேட்டை ஆடினன்; முயலில் ஒன்றைப் பிடித்தனன்; பெருமை யோடு தோளிலே போட்டுக் கொண்டு திரும்பினன். எதிரே ஒருவன் குதிரையில் ஏறி வரவே கண்டனன். குதிரைக் காரன் முயலினக் கூர்ந்து பார்த்துக் கூறினன்: அன்பு மிக்க கண்பனே, அந்த முயலைத் தந்திடு. என்ன விலை நீ கேட்பினும் இஷ்டத் தோடு தருகிறேன் குதிரைக் காரன் இப்படிக் கூறக் கேட்ட முருகனும் அதிக ஆசை கொண்டனன்! 'ஐந்து பத்துக் கேட்டனன். சரிதான் என்றே அவனுமே தலையை ஆட்டிக் கூறியே, முருகனுடைய முயலின முதலில் வாங்கிக் கொண்டனன். 111