பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

21


குளித்தலையையும் எல்லைகளாக உடையது கொங்கு நாடு. இதனை

“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு
குளித்தண் டலையளவு கொங்கு”

என்ற பாடல் தெரிவிக்கிறது.

ஈரோடு மாவட்ட நாட்டுப் பிரிவுகள்

கொங்கு நாடு தென்கொங்கு, வடகொங்கு, மேல்கொங்கு, கீழ்கொங்கு என நான்கு பெரும் பிரிவுகளாக அழைக்கப்பட்டது. அவற்றில் ஈரோடு மாவட்டம் தென்கொங்கு, வடகொங்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. இவ்விரு பகுதிகளையும் ஆட்சி புரிந்த கொங்குச் சோழர்கள் சிலர், “இருகொங்கும் ஆண்ட” என்ற அடை மொழியைச் சேர்த்துக் கொண்டனர்.

மேலும் கொங்கு நாடு நிர்வாக வசதிக்காக 24 உள்நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை,

1) பூந்துறை நாடு 2) தென்கரை நாடு 3) காங்கய நாடு
4) பொன்கலூர் நாடு 5) ஆறை நாடு 7) திருவாவிநன்குடிநாடு
8) மண நாடு 9) தலைய நாடு 10) தட்டய நாடு
11) பூவானிய நாடு 12) அரைய நாடு 13) ஒடுவங்க நாடு
14) வடகரை நாடு 15) கிழங்கு நாடு 16) நல்லுருக்கா நாடு
17) வாழவந்தி நாடு 18) அண்ட நாடு 19) வெங்கால நாடு
20) காவடிக்கா நாடு 21) ஆனைமலை நாடு 22) இராசிபுர நாடு
23) காஞ்சிக்கோயில் நாடு 24) குறுப்பு நாடு என்பனவாம்.

ஈரோடு மாவட்டப் பகுதி நாடுகளும் இன்றைய வட்டங்களும்

1) மேல்கரைப் பூந்துறைநாடு

- ஈரோடு வட்டம்

2) தென்கரை நாடு

- தாராபுரம் வட்டம்

3) காங்கய நாடு

- காங்கயம் வட்டம்