பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. ங் போராட்டத்தின் போது, அவர் தொடரிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 11. பாடிச் செல்லும் குழுவிற்குரிய புதிய விதி யாது?

பாடிச் செல்பவர், பாடிச் சென்று ஒருவரைத் தொட்டு விட்டு வரவேண்டும் என்பது கட்டாயமல்ல. ஆனால் ஒரு குழு தனது ஆட்டக்காரர்களை மூன்று முறை அனுப்பிய பிறகும், அவர்கள் யாரையாவது தொட்டுவிட்டு வராமலிருந்தால், அவர்களின் எதிர்க் குழுவிற்கு வெற்றி எண் கொடுக்கப்படும் என்பது தான் புதிய விதியாகும். - 12. பிடிப்பவர்களுக்குரிய விதி முறைகள் யாவை: 1. பிடிப்பவர்கள் பாடி வருபவரைப் பிடித்து அவுட் ஆக்கவே முயற்சி செய்யவேண்டும். பாடி வருடவரைப் * # 疆 ■ இ. Er بط ь і - - பிடிக்கிற பிடிப்பவர்கள், அவர்கள் தொண்டையை அழுத்தி, பாட முடியாமல் செய்யக் கூடாது. அது தவறாகும் 3 காபம் ஏற்படக்கூடிய அளவுக்கு அவர்கள் வன்முறையால் பிடிக்கக் கூடாது. 4. காலை பின்னிக் கொள்கிற, கத்தரிக்கோல் பிடிமுறையைப் பிடிக்கப் பயன்படுத்தக் கூடாது 5 பாடி வருபவன்' வேண்டுமென்றே ஆடுகளத்திற்கு வெளியே வலிந்து தள்ளக் கூடாது. 6. பாடி வருபவர் தங்கள் பகுதியில் பாடிக் கொண்டிருக்கும்போது, பிடிப்ப வர்கள் மையக் கோட்டைத் தொட்டாலும், எல்லைக்கு வெளிப் பகுதியை மிதித்தாலும், அவர்கள் ஆட்டமிழந்து போவார்கள் 13. ஆட்டமிழந்து வெளியே இருப்பவர் மீண்டும் . ஆடுகிற விள்ய்ப்ப்ை சிப்படி எப்பொழுது பெற முடியும் (Revival) அவுட்டாகிவிட்ட ஒரு ஆட்டக்காரர். அவர் பகுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் உட்காரும் கட்டத்தில் போய், தான் அவுட்டான வரிசைப்படி உட்கார வேண்டும். எதிராளி ஒருவர் பிடிபட்டோ அல்லது தொடப்பட்டோ அவுட் ஆகிறபோது, வெளியே இருப்பவர் தன் அவுட்டாணவரிசைப்படி உள்ளே வந்து ஆடுகிற வாய்ப்பைப் பெறுவார். இந்த வரிசை முறையை ஒரு துணை நடுவர் கண்காணிப்பார். - 14. கபாடி ஆட்டத்தில் உள்ள முக்கிய திறன்கள் யாவை? 1.பாடிச் செல்லுதல் 2 மூச்சடக்கிப் பாடும் திறன் 3 பாடி வருபவரைப் பிடித்தல் பாடி வந்து திரும்புபவரை உடனே பின் சென்று தொட்டு அவுட் ஆக்குதல் எல்லாம் முக்கியமான திறன்களாகும். --