பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 பொருளை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நான் பிறந்த காஞ்சிபுரத்திலும், அதைச் சுற்றிய சி. றூர்களிலும் ஜைன மதத்தைச் சேர்த்த மக்கள் இருக்கிறார் கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பு உண்டு. . "இந்த மார்க்கம் தமிழர்களுக்கே உரிய மார்க்கம்' என்று கூட., தமிழ் ஆய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின் றனர்; ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு. வழிகாட்டிகள் இருந்தும் வாழ்வில் முன்னேறவில்லை நாம் உலகத்திலேயே நம்முடைய நாட்டில் தான் பெரும் பெரும் மகான்கள்- வழிகாட்டிகள் தோன்றி இருக்கின்றார் கள். நான்கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன்-இப் படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம்; அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல். இருந் திருக்கலாம், என்று; பெருமைக்குரிய வழிகாட்டிகள் பலர். இருந்தும் கூட; நாம் இந்த அளவுக்குக் கெட்டுப்போயிருக் கிறோமே' உயர்ந்த நிலையில் இல்லையே என்பதால் தான், அப்படிக் கருதத் தோன்றியது. இது போன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில், எவ்வளவோ முன்னேறி இருக்கிறார்கள்--வளர்ச்சி அடைந்தி ருக்கின்றார்கள்; ஆனால்; வழிகாட்டிகள் இருந்தும் - அவர்கள் வழிநடத்திச் செல்பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை! காரணம், நாம் சொல்பவர்களாக. இருந்தோம் இனிமேல் செய்யத் தவறிவிட்டோம்! ஆகவே, சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.