பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248


31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்

கடிதங்கள் பல எழுதவேண்டியிருப்பதைப்பற்றி உமார் மறந்து பல வாரங்களாகிவிட்டன. உண்மையில் அவன் அயீஷாவைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை. அவள் இப்பொழுது முக்காடு இல்லாமலே தோட்டம் முழுவதும் சுற்றித்திரியலாம். ஒவ்வொருநாள் மாலையும் அவள் எந்த விதமாகவோ புதுமையாகத் தென்படுவாள்.

உமாருடைய சிந்தனைகளைப்பற்றி அவள் ஒன்றுந் தெரியாதவளாக இருந்தாள். அதுவே அவர்கள் இரண்டு பேரையும் பிணைக்கும் வாய்ப்பாயிருந்தது. உமார், தன் சிந்தனைகளிலிருந்து விடுபடுவதையே பெரிதும் விரும்பினான். இதை ஆயிஷா புரிந்துகொண்டாள். சில விஷயங்களில் அவள் அவனைக் காட்டிலும் புத்திசாலியாக இருந்தாள். அவள் அமைதியாக இருக்கும்போது எல்லோருக்கும் பெரிய புத்திசாலியாக இருந்தாள்.

அவளுடைய அன்பு கட்டுப்பாடில்லாத கடும்வேகம் உடையதாக இருந்தது. அந்த அன்பிலே, தாய்மையுணர்ச்சியும் கலந்திருந்தது. அயீஷா, உமாருக்கு வேண்டிய உணவுகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினாள். முதன் முறையாக அடுக்களையில் நுழைந்த அவளை சுலெய்க்கா தடுத்து, அங்கே தனக்குத்தான் உரிமை உண்டென்பது போல் பேசினாள்.

“உன் மாமன் - மைத்துனர்கள் வந்து சட்டைப் பைக்குள்ளே கசாப்பை மறைத்துக் கொண்டு போவதும், பிள்ளை குட்டிகளுக்கு அள்ளிக் கொடுப்பதும் எனக்குத் தெரியும்.

எல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தலைவருக்கு, உணவு சமைத்தாவது, உன்னுடைய இந்த அற்பச் செயலை மறந்துவிடலாமென்றுதான் பார்க்கிறேன்” என்று சொல்லி அவளை அடக்கிவிட்டாள்.

அதன் பிறகு, கலெய்க்கா, மணல் காட்டிலே பிறந்த இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஏற்றமா என்று முணுமுணுத்துக்