பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 உருள்கின்ற கோள்கள் உருண்டை வடிவமாயின. போலும் இயற்கையானது வேண்டியதை வைத்துக் கொள்ளும்-வேண்டாததை விலக்கித் தள்ளும் என்னும் கொள்கைப்படி, கோள்களின் சுழற்சி வேகத்தில், மேற் பரப்பில் உள்ள சில பகுதிகள் பிய்த்து எறியப்பட, மற்ற பெரும்பகுதி தன்னில் தானே உருண்டை வடிவம் பெற்றுவிடும் போலும். - அடுத்து, அப்பாடல் பகுதியின் உண்டைப் பிறக்கம். என்னும் தொடரிலுள்ள பிறக்கம் என்பது பற்றிக் காணலாம். பிறக்கம் என்றால் தொகுதி ಅಕ್ಲ குவியல் என்று பொருளாம். கம்ப ராமாயணத தல இச்சொல் இப்பொருளில் ஆளப்பட்டுள்ளதை,

  • நேர் செலா திடை கின்றனர் நீள் நெடுங் கார் செலா இருள் கீறிய கண்ணகல் தேர் செலாது விசும்பிடைச் செல்வதோர் பேர் செலாது பினத்தின் பிறக்கமே

என்னும் பாடலால் அறியலாம். மற்றும், முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் தமது பொருநராற்றுப் படை என்னும் நூலில், உழவர்கள் அரிவாளால் அறுத்த கெல் அரிக்கட்டைக் குன்றுடோல் அடுக்கிக் குவித்தனர் என்னும் பொருளில் - சூடு கோடாகப் பிறக்கி" - (243) என்னும் அடியை அமைத் ஸ்ளார். சூடு= நெல் அரிக் கட்டு; கோடு = குன்று போன்ற மேடு: பிறக்ருதல் = அடுக்கிக் குவித்தல். எனவே, பிறக்கம் என்னும் சொல் லுக்கு, தொகுதி அடுக்கம் - குவியல் என்பது பொருள்.

  • (யுத்த டெதொக பாசப் படலம்- 156)

35 எ வே உண்டைப் பிறக்கம் என்பது, கோள்களின் கு வியல் அல்லது தொகுதி என்னும் பொருளதாகும். கோள்களின் தொகுதி என்றால் என்ன? ஞாயிறு மண்டலம் போன்றி பல மண்டலங்களையே உண்டைப் பிறக்கம் என்பது குறிக்கிறது. ஞாயிறும், அதனின்றும் பிரிந்த பல பெருங் கோள்களும், பல சிறு கோள்களும், பல துணைக் கோள்களும், பல வால் விண்மீன்களும், பல எரி விண்மீன்களும் இன்ன பிறவும் அடங்கிய தொகுதியே ஞாயிறு மண்டலம் ஆகும். இது போல் விண்வெளியில் எத்தனையோ மண்டலங்கள் உள்ளன. ஞாயிறு மண்டலத்தைப் போலவே அவையும் பிற் காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம். அடுத்து, ஒன்ற னுக்கு ஒன்று நின்றெழில்’ என்பது, ஒரு விண் மீனுக்கு மற்றொரு விண்மீன் பெரியதாகவும் நீண்ட நெடுந் தொலைவில் உள்ளதாகவும் அமைந்திருக்கும் நிலையைக் குறிக்கிறது. அவை அளப்பருந்தன்மையும் வளப்பெருங் காட்சியும் உடையனவாம். அடுத்த படியாக, நூற்றொரு ேக எ டி யி ன் மேற்பட விரிந்தன. என்னும் தொடருக்கு வருவோம்: விண்வெளியில் கோடிக் கணக்கான கோளங்கள் உள்ளன வாம். கோடி எனில், ஒரு கோடி-இருகோடி-சிலகோடி அல்ல- நூற்றுக் கணக்கான கோடிகளாம். அன்பளிப்பு செய்பவர்கள் சாயாக நூறு ரூபாய் மட்டும் தராமல், மேலும் வளர வேண்டும் என்னும் நோக்கத்துடன் நூற்றொரு (101) ரூபாய் அளிப்பது வழக்கம். அது போல், சரியாக நுாறு கோடி அல்ல-மேலும் துாற்றுக் கணக்கான கோடிகள் என்பதை அறிவிப்பதற்காக, மாணிக்க வாசகர், நூறு கோடி என்னாமல், 'நூற் றொரு கோடி என வளர்ச்சி முகமாகக் கூறியுள்ளார். அதனோடு அமையாது, கோளங்கள் பல்லாயிரங்