இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
151
தெளிவில்லாத உரைநடை படிப்போர்க்கு விளங்காத நடை எனவும், எழுதியவனுக்கு விளங்காத நடை எனவும் இருவகைப்படும்.
-மாரி
★ ★ ★
62. வாழ்க்கை வரலாறு
சரியாக ஆராய்ந்து பார்த்தால் சரித்திரம்" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே.
- லாண்டார்
சகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே.
-லாண்டார்
உண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும்.
-ஜாண்ஸன்
எல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன.
-கார்லைல்
நல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும்.
-கார்லைல்
★ ★ ★