பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

93


இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.

-டிலட்ஸன்

அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.

-ரிக்டர்

முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.

-குவார்ல்ஸ்

அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.

-லுக்காஸ்

மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.

-காஸத்

காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.

-செஸ்ட்டர்பீல்டு

மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.

-லவாட்டர்

அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.

-ரோஷிவக்கல்டு

விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.

- ஜார்ஜ் எலியட்