இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
93
இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை.
-டிலட்ஸன்
அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும்.
-ரிக்டர்
முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
-குவார்ல்ஸ்
அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன்.
-லுக்காஸ்
மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை.
-காஸத்
காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.
-செஸ்ட்டர்பீல்டு
மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான்.
-லவாட்டர்
அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர்.
-ரோஷிவக்கல்டு
விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.
- ஜார்ஜ் எலியட்