பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் - செய்து வழியிலுள்ள அபாயங்களைத் தாண்டிச் சென்றால் அவன் உள்ளத்தில் உரமுள்ளவன். இந்த உறுதி. தானே முக்கியமான ஒரு பண்பாக விளங்குவதுடன், மற்ற பண்பு களையும் காத்து நிற்கின்றது. சி லாக் உள்ளுணர்வு ★ விலங்குகளுக்குள்ள இந்த இயற்கை அறிவுக்கு மேலாக இயற்கையில் காணும் அறிவு கடந்த விஷயம் எதுவுமில்லை என்பது என் கருத்து. இந்த உணர்வு பகுத்தறிவுக்கு மேலே தோன்றுவது. ஆயினும், அதைவிட மிகவும் தாழ்ந்தது. அடி பள் பகுத்தறிவு முன்னேறி வளர்வது இயற்கை அறிவு நிலையாக நிற்பது. ஐயாயிரம் ஆண்டு காலமாகத் தேனியின் கூட்டில் எவ்வித அபிவிருத்தியுமில்லை; நீர்நாயின் வீட்டிலும் மாறுதலில்லை. அ கோல்டன் அபிவிருத்தியடையக்கூடிய பகுத்தறிவே மனிதனுக்கும் விலங்குக்குமுள்ள வேற்றுமை. ைடி. பின்னி பெருமை மிகுந்த ஒரு சமூக மக்களின் உள்ளுணர்வு அவர்களுடைய தலைசிறந்த அறிவாளர்களைவிட மேலான ஞானத்தைப பெற்றிருக்கிறது. . கோலத் இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள் முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார். இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான். அ போப் உள்ளுக்கம் 女 வெற்றிக்குக் காரணம் திறமையைக்காட்டிலும் உள்ளுக்கம்ே யாகும் என்று அனுபவத்தில் தெரிகின்றது. எவன் தன்