பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ※ 65 ፶፫ தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம். A உலகநீதி அறிவின்மை கல்லாமையைவிடப் பிறவாமலிருத்தல் மேலாகும். ஏனெனில், அறிவின்மைதான் எல்லாத் துயரங்களுக்கும் வேர். அ பிளேட்டோ அறியாதாரிடம் அனுதாபம் கொள்வது தலைசிறந்த பண்பாட்டிற்கு அறிகுறி. அ எமர்ஸன் தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமை யின் துயரமாகும். அ ஆல்காட் அறியாமையால் ஆணவம் வளரும் ஆகக் குறைவான அறிவுடையவரே அதிகம் தெரிந்ததாகப் பாவனை செய்வர். அ கே அறிவிலி கழுகுச் சிறகுகளையும், ஆந்தைக் கண்களையும் பெற்றிருக்கிறான். அ. ஜியார்ஜ் ஹெர்பர்ட் கல்வியில் செருக்கடைதல் முதன்மையான அறியாமை. - ஜெரிமி டெய்லப் அறிவிலி மெளனமாயிருப்பதைப் போல் அவனுக்கு நன்மை வேறில்லை; இதை அவன் உணர்வதனால் அவன்.அறிவிலி யாயிருக்க மாட்டான். அ லாஅதி அறிவிலியாயிருப்பதைவிடப் பிச்சைக்காரனாயிருப்பது மேல், பிச்சைக்காரனுக்குப் பணம் ஒன்றுதான் தேவை. ஆனால், அறிவிலிககு மானிடப் பண்பே தேவை. அரிஸ்டிப்பஸ் அறியாமை இறைவனின் சாபத்தீடு, அறிவுடைமை நாம் வானத்திற்குப் பறந்து செல்ல உதவும் சிறகு, க. ஷேக்ஸ்பியர் அறிவின்மை உள்ளத்தின் இரவு. ஆனால், அந்த இரவில் மதியுமில்லை. தாரகையுமில்லை. ைகன்.-பூவயெஸ் ל - וע. . +