பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

63



மாவீரன் முஸ்தபா. கி.பி.1881-ம் ஆண்டில், சலோனிகா என்ற துறைமுகத்தில் மிகச் சாதாரண எடுபிடி வேலையாளாகப் பணியாற்றிய அலிரிசா என்பவருக்கும், சபீதா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார்.

அலிரிசா என்ற துறைமுகப் பணியாள் ஒரு வேலைக்காரனாக இருந்தாலும் கூட, அவர் ஒரு சிந்தனையாளராகவும் இருந்தார். இருந்து என்ன பயன்? சிந்தித்ததைச் சுறு சுறுப்புடன் உடனடியாக முடிக்காமல், நாளை, நாளை என்று நாள் கடத்திவரும் திறமையற்ற ஓர் அப்பாவி மனத்திறன் இல்லாத, உடற் திறனில்லாத ஓர் அச்சம் வாய்ந்த சோம்பற் பிறவி அதனால் அவரது மனைவி சபீதா குடும்பப் பாராத்தைச் சுமந்து வாழலானார், பாவம்!

தந்தையைவிட, தாய் எடுத்தக்காரியத்தை உடனுக்குடன் முடிக்கும் திறன்பெற்ற பெண்ணாக இருந்தார். சபீதா தனது மகன் முஸ்தபாவை அருமையாக வளர்த்து, தன்னால் முடியும் அளவுக்குரிய கல்வியைக் கற்றுக் கொடுக்க கணவரின் நண்பர் ஒருவர் உதவியால், முஸ்தபா சலோனிகாநகரிலுள்ள ராணுவப் பள்ளியிலே சேர்ந்தார்.

இராணுவப் பள்ளியினர் நடத்திய தேர்வு ஒன்றில், வியக்கத்தக்க அளவுக்கு முஸ்தபா எழுதி போதிய மதிப்பெண் பெற்றதால், அவர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.