பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

உள்ளம் குளிர்ந்தது

யதிகத்தின் கடைசியிலும் உள்ள பயனைத் திருக்கடைக் காப்பு என்று சொல்வது வழக்கம். எல்லா நூல்களிலும் வெளிப்படையாகப் பயனைச் சொல்லா விட்டாலும் அது குறிப்பாகப் பெறப்படும்.

அலங்காரத்தின் பயன்

ருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அலங்காரம் என்ற ஓர் அரிய மாணிக்க மாலையை நமக்குத் தந்தார். காப்புப் பாடல் ஒன்றும், நூலில் உள்ள பாடல் நூறும்,பொங்கி வழிந்த பாடல்கள் ஆறும் ஆகிய நூற்றேழு பாடல்களை நாம் பார்த்தோம். இனி ஒரு பாடல் எஞ்சி நிற்கிறது. அதுவும் சேர்ந்தால் அழகான ஜப மாலையில் 108 ருத்திராட்ச மணிகள் அமைந்ததுபோல 108 பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். இப்போது பார்க்கப் போகிற பாடல் கந்தர் அலங்காரத்தின் பயனாக உள்ளது.

கந்தர் அலங்காரத்தைப் படிப்பதனால் நமக்கு உண்டாகும் பயன் முருகப்பெருமானிடத்தில் பக்தி உண்டாகி உள்ளம் நெகிழ்வது, உள்ளத்தில் உள்ள தளர்ச்சி போய் உறுதிப்பாடு உண்டாதல், தமிழ் இன்பம் நுகர்தல் முதலியன என்று சொல்லலாம். இவற்றுக்கும் மேலே அருணகிரியார் வேறு சில பயன்களைச் சொல்கிறார்."கந்தர் அலங்காரம் முழுவதும் படிக்க வேண்டும் என்பதில்லை. இந்த நூறு பாடல்களில் ஒரு பாட்டைப் படித்தாலே இன்ன இன்ன பயன் உண்டாகும்" என்ற முறையில் இந்தப் பாட்டை அமைக்கிறார்.

மூன்று வகைப் பயன்

ந்தர் அலங்காரத்தைப் பாடியதற்கு மூன்று வகையான பயனைச் சொல்லலாம். ஒரு பயன் பாடியவரைச் சார்வது; மற்றொன்று பாட்டுடைத் தலைவனுக்குக் கிடைப்பது,