பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உள்ளம் குளிர்ந்தது



நிருத சங்கார பயங்கரன்

சுரர்களைச் சங்காரம் செய்தவன் அவன். அவர்களுக்குப் பயத்தைத் தோற்றுவிக்கிறவன். உலகத்தவருக்குப் பயத்தை உண்டாக்கி ஞானிகளுக்கும், தேவர் களுக்கும் துன்பத்தை அளித்தவன் சூரன். தன்னுடைய உறவினர்களாகிய அசுரர்களைப் படையாகக் கூட்டிக் கொண்டு எப்போதும் துன்பம் செய்து கொண்டிருந்தான். அவன் பேரைக் கேட்டாலே இந்திரன் முதலிய தேவர்கள் பயந்தார்கள். எல்லோருக்கும் பயத்தை உண்டாக்கித் தாம் மட்டும் பயப்படாமல் இருந்த நிருதர்களும் பயம் கொள்ளும்படி செய்தவன் முருகன்.

நிருதசங் கார பயங்கரனே!

"சிறந்த வீரராகிய திருமால் போற்றுகின்ற பெரு வீரனே, உண்மையான வீரத்தை உணர்ந்த அக் கடவுள் மெச்சிப் பேசுகின்ற பராக்கிரமத்தையுடைய வடிவேற் பெருமானே, அசுரர்கள் பயம்கொள்ளும்படியாகச் செய்து அவர்களைச் சங்காரம் செய்த பெருமானே, நீ எனக்கு இராப்பகலற்ற இடத்தைக் காட்டி நான் அமைதியாக இருந்து தியானம் செய்து உய்வதற்குரிய உன்னுடைய தண்டையந் தாளைத் தரவேண்டும்" என்று இந்தப் பாட்டில் அருணகிரியார் பிரார்த்தனை செய்கிறார்.

இராப்பகல் அற்ற இடம்காட்டி
யான் இருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாள் அரு
ளாய்; கரி கூப்பிட்ட நாள்
கராப்படக் கொன்று அக் கரிபோற்ற
நின்ற கடவுள்மெச்சும்