ix
அவர்களின் தொழிலாளர் இயக்க ஈடுபாட்டையும், தொடர்பையும் அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சில், எழுத்தில் இருந்து தொகுத்து இந்நூலில் அளித்துள்ளார். இந்த முயற்சி திராவிட இயக்கத்திற்குச் செய்யும் பெரும்பணியாகும்.
தெளிவற்று குழப்பமுற்று தடுமாறிக் கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டும் கைவிளக்கு, கலங்கரை விளக்கம்.
ஆசிரியர் குலோத்துங்கன் அவர்களுடைய முயற்சிகள் மென்மேலும் வளரவும் வெற்றி பெறவும் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
மு. கண்ணப்பன்
பொருளாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழுச் செயலாளராகவும் 'கண்ணியம்' திங்களிதழின் ஆசிரியருமான அன்புச் சகோதரர் ஆ. கோ. குலோத்துங்கன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துக்களைத் தொகுத்து, உழைப்பாளி, தொழிலாளி, பாட்டாளி, எனும் தலைப்பில் நூல் வெளியிட்டிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். இந்நூல் அண்ணாவின் கருத்துக்கள் மேலும் பரவிட வழிவகுக்கும், என்பதில் ஐயமில்லை.
எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.