பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 53



நல்லது செய்யலாம்; இதனால் முதலாளித்துவம் ஒழிந்து விடும்--ஓங்கி வளராது!

முதலாளித்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்க இன்னொன்றும் செய்யலாம்; தனிப்பட்ட எவரும் எந்தத் தொழிற்சாலையையும் நடத்த அனுமதிக்கக் கூடாது;

முதலாளிகளிடம் இருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்; எல்லாத் தொழிற்சாலைகளையும் சர்க்கார் ஏற்று நடத்த வேண்டும் அவ்விதம் செய்தால், அதில் கிடைக்கும் இவாபம் அரசாங்கத்தைச் சாரும் எந்தத் தனிப்பட்ட முதலாளிகளையும் சாராது; அதனால் முதலாளித்துவம் வளராது--பூண்டே இல்லாமல் ஒழிந்து விடும்! அப்படித்தான் இன்றைய உலகில் பலர் வருகிறார்கள்!

முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க அவ்வப்போது அதைத் தடுக்க வேண்டும். அளவுக்கு மீறி வளர இடம் தராமல் தலைமேல் தட்டிச் சரிபடுத்திக் கொண்டே செய்து வர வேண்டும்!

19. தொழிலதிபர்கள் பற்றி அண்ணா

திருவொற்றியூர் இம்பீரியல் டுபாக்கோ கம்பெனி தொழிலாளர்களின் குடியிருப்புகளை, 14-4-67 அன்று, அண்ணா அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

".......இங்கு 50க்கும் மேலான அழகான இல்லங்களைத் தொழிலாளர்கட்குத் திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்கு நல்கியமைக்காக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர் நலன் கருதியே இதுபோன்ற காலனிகளை அமைத்துத் தருகின்றார்கள்-தொழிலதிபர்கள்!