பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|02 கவியரசர் முடியரசன் படைப்புகள் 8 'உண்டி வாங்கித் தரலும் ஒல்லுமோ? என்றதும் எளியவர் எழுந்துடன் விரைந்து சென்றது வாங்கித் திரும்பினர். அவ்வயின் மருத்துவர் வந்தவர் மகிழ்ந்தனர் கண்டு, 'பொருத்தம் பொருத்தம் புலவர்தம் தொடர்பு நானே அறிமுகஞ் செய்ய நயந்தேன் தானே நடந்தது தனிப்பெரு மகிழ்ச்சி’ என்றன ராக, இதுவரை ஈங்கு நின்றுறு பணிகள் நெஞ்சினில் உவந்து நன்றுறப் புரிந்தவர் யாரென வினவ அரசன் சண்முகர் ஆமெனல் அறிந்து பெருமையின் பணிவைப் பெரிதுவந்தனரால் பெருகி வளர்ந்தது பெட்புறு நட்பே. கைப்பொருள் வற்றிய காலையும் புலவர் கற்பனை வற்றுதல் காணார்; அவருள் அரசன் சண்முக னாரும் ஒருவர்; வறுமைத் துயரினை வடித்தல் காண்மின் ‘கடனெனுந் துரியனால் கைப்படும் ஊக்கமாம் இடம்படும் நாட்டை இழந்து சஞ்சல வனத்தில் மதியெனும் மனையுடன் ஐம்பொறி எனப்படும் பஞ்சவர் கூட்ட மானயான் அலைந்து திரிந்ததை அறிவீர் நூம்மைப் பிரிந்திவண் வந்தபின் கரந்துறை வாழ்வில் திரிந்த நேரம் திண்டுக் கல்லெனும் விராட நகரத்து மகமதியர் எனைத்துயர் உறாவணங் காத்தனர்; உயரிய செல்வர்; இருந்த நன்செயை ஈடு வைத்துக் கரந்துறை வாழ்வைத் துறந்து வந்தபின் உத்தியோக பருவமும் உஞற்றினேன், உரிய பதினெண் நாட்போர் ஓய்ந்தது துரியனும் ஆங்கே துடைமுரிந்து வீழ்ந்தான் ஆயினும் உயிர்தான் அகன்றிலன் எனினும் வீயும் அந்நாள் விரைவினில் வந்துறும் அந்நாள் வந்தபின் நன்னூல் ஆய்வெனும் பொன்முடி சூட்டு விழாவும் பொலிவுறும் ፳'(] 5() 55 M[] Mo) 5s)