பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| || 4 கவியரசர் முடியரசன் படைப்புகள் : ‘தோயுமுளக் கதிர்மணியும் கா.சு. பிள்ளை' எனச்சொல்லுந் தூயவரும் கலைக ளெல்லாம் ஆயுமுயர் கழகத்தின் இரண்டு கண்கள்: யாம்பயிலும் அந்நாளில் அந்த மேலோர் ஞாயிறெனத் திங்களெனத் திகழ்ந்து நிற்பர் நல்வர்பாற் பயிலஎழும் ஆர்வம் உந்தப் பாயுமலைக் கடல்கடந்து சென்றோம்; அங்குப் பலகற்றோம் எம்வாழ்வின் பயனும் பெற்றோம்’ |t, 'அகப் பொருளோ புறப்பொருளோ நீதி நூலோ எதுவெனினும் அளவில்சுவை சொட்டச் சொட்டப் புகட்டிடுவார் அச்சுவையிற் சொக்கி நிற்போம்: பொழுதகலல் தெரியாது பாடஞ் சொன்னால், அகத்துறுவோர் விரும்பியநூல் உரைப்ப தற்கும் அகஞ்சலியார் அவருளமும் புலமுங் கண்டு திகைப்புறுவோம்களிப்புறுவோம்: இவையனைத்தும் தென்னிலங்கை இலக்குமண ஐயர் சொற்கள் 17 கலைமலிந்த கதிரேசர் செறிந்த கல்விச் கடலாக அந்நகரில் விளங்குங் காலை, புலம் விழைந்து வந்ததனுட் படிந்து மூழ்கிப் புனலுண்டு திசையெங்கும் படர்ந்து சென்று நிலங்குளிர்ந்து செழுமையுற மழைபொழிந்து நிலவிவரும் மாமுகில்கள் பலவாம்; மேலும் நலம்மிகுந்த தமிழ்மொழியாம் பயிர்வளர்ந்து நாட்டகத்து விளைபயனும் பலவாம் இங்கே 18 மலர்விரிந்து கனிமிகுந்து நிழலும் நல்கி மணம்பரப்பும் பூம்பொழிலே மணியார் அங்கே அலர்குடைந்து மட்டுண்ட சுரும்பி னங்கள் அங்கங்கே யாழிசையை வழங்கி நிற்கும்: பேராசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை வீடுதேடிவருவோர் அறிவு, 1. தேன்,