பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் சேற்று நிலமாய்அச் சிற்றுர் விளங்கும். பகடு தனைப்பூட்டிப் பண்டியில் ஊர்வோர் சகடு தனையிழுக்கத் தாங்குதித்து நிற்பார் சுடுகாடும் அங்கே சுடர்விட்டுக் கண்ணிற் படுமாறு தோன்றிப் படர்வாரை அச்சுறுத்தும்: கள்வர் சிலரும் கரந்து திரிந்திடுவர். உள்ளின் எவரும் உளம்நடுங்கி வேர்த்திருப்பர்: பாதை கடக்கப் படும்பாடு கண்டவர்தாம் வாதை மறந்து வருவாரோ அவ்வழியில்? அஞ்சல் நிலையம் அமைந்த இடமதுதான் அஞ்சாறு கல்லிருக்கும் அந்தோ எனத்தோன்றும். பிள்ளைப் பருவத்தார் பேணும் அறிவுபெறப் பள்ளித் தலமொன்றும் பார்த்தறியார் அவ்வூரார் பேருந்து செல்லாப் பெருமை உடையதோர் ஊரந்த ஊரேதான்; யாரங்குச் செல்வார்கள்? கண்ட கதிரேசர் காட்டு வழிதிருத்துந் தொண்டு செயநினைந்தார் தோலா முயற்சியினால் அஞ்சலகம் கல்வியறிவு தருஞ்சாலை, அஞ்சலின்றிச் செல்ல அழகு தருஞ்சாலை, உந்தூர்தி செல்ல உயர்பாலம் எல்லாமே முந்திவரச் செய்தார் முனைந்து. - 2 10 15 20