பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்றுகோல் இன்னியம் முழங்கும் ஒர்பால் இசையுடன் மூவர் சொன்ன நன்னயங் கெழுமு பாடல் நலமுற ஒலிக்கும் ஒர்பால் சின்னவர் ஒடியாடுஞ் சிரிப்பொலி கேட்கும் ஓர்பால்: முன்னைய மறைகள் ஒதும் முழக்கமுங் கேட்கும் ஒர்பால். கண்களைக் கவருங் கோலம் காதுகள் இனிக்கும் பாடல் தண்ணெனும் பந்தர் யாவும் சார்தரப் பொலிந்த தவ்வூர்; பண்ணுயர் தமிழில் வல்ல பண்டிதர்க் கறுபான் ஆண்டு நண்ணிய தறிந்த மக்கள் நகரினை அழகு செய்தார். கொட்டிய முழவின் ஒசை, குலவிய குழலின் ஒசை, 'பட்டியல் மடவார் பேச்சு, பச்சிளங் குழந்தை பாடல், 'அட்டிலில் முனைவார் கூவல் ஆடவர் அங்கு மிங்கும் இட்டநற் பணியின் மேவி அலைபவர் எழுப்பும் ஒசை, வரவுரை கூறும் ஒசை வருபவர் வழங்கும் ஓசை மருவிய அன்பின் வந்தோர் வழங்கிய வாழ்த்தின் ஓசை, பரிசினைச் சுமந்து வந்தோர் பரப்பிய ஓசை யெல்லாம் செறிதரப் படர்ந்த தந்தச் செந்தமிழ் மனையில் யாண்டும். 'பட்டுடுத்த சமையற்கூடம். [135