பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 47 ாறு கோல் மாணவர்புலம்பல் 'அழுக்கறுக்கும் நூல்களிலே பெரியனவாம் அரியனவாம் என்ப வேனும் பழுத்திருக்கும் நுண்மதியால் எளிதிலவை படிப்பித்தாய், எங்கள் வாழ்வில் முழுத்தகுதி பெறுவதற்கும் நல்வழிகள் மொழிந்தாய்நீ மறப்ப தேயோ? வழுத்துகிறோம் நின்னடியை’ எனநினைந்து மாணவர்தாம் வணங்கி நின்றார். 9 சன்மார்க்க சபையார் புலம்பல் 'தலைவிக்கோ தலைவனில்லை; மகனுக்கோ தாயில்லை. பூத்தி ருக்கும் மலருக்கோ மணமில்லை. வானுக்கோ மதியில்லை, மறவர் கூட்டத் தலைவற்கோ வாளில்லை. சன்மார்க்க சபையினுக்கோ நீதான் இல்லை நிலைமைக்கே என்செய்வோம்?’ எனச்சபையார் நெஞ்சுழன்று மயங்கி நின்றார். 10 கவிமணி புலம்பல் 'பத்தரெலாம் போற்றிவரும் Lങ്ങു மணியேநீ வாத ஆரர் சித்தமெலாங் கசிந்துருகிச் சிவமாகிச் செய்தருளும் வாசகத்தின் புத்தமுதைக் கடைந்தெடுத்து வழங்கிவரும் புண்ணியந்தான் முற்றா முன்னர் அத்தனடிக் காளாகி அதனிழலில் அமர்ந்தனையே ஐயா ஐயா!' 11 'அடங்கொண்ட நோயதனால் அல்லலுக்கே ஆளாய்நிற்கின்றேன். காலன் வடங்கொண்டு வருங்காலம் வாராதோ எனைநோக்கி என்று நொந்தேன் 'திருவாக உரைமுடியுமுன்னே.