பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்றுகோல் இலக்கியப் பண்பா டின்னும் இருக்கிற தென்று கூறித் துலக்கிடச் செட்டி நாடே துணையெனச் சொல்ல லாகும் நலத்தகும் அந்நாட் டுள்ள நமதுபூங் குன்றுக் கின்று சொலப்படும் பெயரோ நல்லோர் சூழ்மகி பாலன் பட்டி பொருளினால் மிகுந்த மேலோர் புலமையிற் சிறந்த நூலோர் அருளினால் இரங்கும் நல்லோர் அன்புடன் பண்பும் உள்ளோர் குறளினால் உரைத்த கொள்கை குறிக்கொளும் இல்லறத்தார் மருளினால் திரியா மாந்தர் மதியினார் வாழும் நல்லூர் திரைவழி கடந்து சென்று திறமையால் ஈட்டு வாரும் செறுவழி உழுது செல்வம் சேர்த்ததை உதவு வாரும் தருவழி யறிந்து செல்வம் தக்கவர்க் கருளுவாரும்) ஒருவழி அறமே யாக உலவிடும் நல்லூர் அவ்வூர் இளஞ்சிறார் பயிலும் பள்ளி இருப்பதங் கொன்றே ஒன்று புழங்குவார் இருவர் மூவர் போய்வரும் தெருவி ரண்டு வழங்கிடும் கடைகள் மூன்று வடிவினிற் சிறிய வாகும் அளவுவார் மக்க ளீட்டம் ஆயிரத் தைந்நூ றாகும் 'வயல்,