பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊன்றுகோல் வாய்மொழி கல்லா ராகி வருமொழி மட்டுங் கற்றுத் தாய்மொழி பழித்து வாழ்ந்து தமிழரென் றிருப்பா ருள்ளார்: ஆய்மொழி பயின்றும் மற்றை அயன்மொழிக் கடிமை யாகும் நாய்மனங் கொள்வார் தாமும் நந்தமிழ் நாட்டில் உள்ளார் அறிவினை வளர்க்க வேண்டி அயன்மொழி ஒன்றைக் கற்றார்: செறிதரும் அறிவைக் கொண்டு செந்தமிழ் பேணி நின்றார்: நெறிதடு மாற வில்லை நெடும்புகழ்த் தமிழை என்றும் குறைபடப் பேச வில்லை குலக்கதி ரேசர் மாதோ பெற்றதாய் மொழியிற் பற்றும் பிறமொழி தனில்ம திப்பும் உற்றிடல் வேண்டு மென்னும் உளக்குறிப் புணர்த்தல் போலப் பெற்றதம் பெயரின் முன்னர்ப் பிறங்குதல் தமிழே யாக மற்றது வடமொழிக்கண் மருவிய பெயரர்ஆனார் இருமொழி நூல்கள் தேடி எப்பொருட் டாகக் கற்றார்? பொருள்வரும் புகழும் வந்து பொலிந்திடும் என்றா கற்றார்? ஒருசிறிதேனும் அவ்வா றுளத்தினிற் கருத வில்லை; இருள்படர் வாழ்வில் இன்பம் எய்துதல் குறித்தே கற்றார் பெயர் - கதிரேசன். கதிர் + ஈசன், | 5 || 35 36 57 38