பக்கம்:எச்சில் இரவு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

89


வெட்டுக்களை ஆராய்ச்சி செய்வாராம் நீங்களோ என் கண் வெட்டுக்களை அடிக்கடி ஆராய்ச்சி செய்கிறீர்கள்' என்று அவள் கூறினாள். 'கலந்துறவாடும் வேளையில் கண்வெட்டு ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும்”, என்று அவன் கூறினன். அப்போது அங்கே, இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெறவில்லை; இரண்டாவது கட்ட வாய்ப்பதிவு நடைபெற்றது. அது முடிந்தபின், அறைக்குள் அவள் சென்றாள். அவன் அவளோடு பாதி நாடகம் நடத்தினன். வெளவால் அடித்துத் தின்னும், அணில் கடித்துத் தின்னும், அவனே அவளைப் பிடித்துத் தின்யான். பின்னர் இடித்து நின்றான். ராஷ்ட்ரபதி ஆகமுடியாத அவன், ‘ராத்திரிபதி' ஆனான். நன்னீர் நதியாக இருந்த அவள், வெந்நீர் நதியானாள். பளிச்சென்று முத்தமிட்டபோது, அங்கே பல்லவி பிறந்தது. ஆர்வத்தோடு தழுவிய போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/99&oldid=1405345" இலிருந்து மீள்விக்கப்பட்டது