பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 உலக அவர், அன்றோர் நாள். தென்னாட்டுக்கு வந்திருந்த நேரத்தில், நானும் என்னைச் சார்ந்த இயக்கத்தினரும் ராமாயண எரிப்பு கிளர்ச்சியிலீடுபட்டிருந்தோம். அதை பற்றி, அவரிடம் குறிப்பிட்டபோது, உத்தமர் குறிப்பிட்ட வார்த்தைகளை தேசிய நண்பர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் சொன்னார்- "நான் கூறும் ராமன் வேறு ! ராமாயணத்தில்-வால் மீகியும் கம்பரும் வர்ணிக்கும் ராமன் வேறு ! என்னுடைய ராமன் சீதையின் புருடனல்ல: தசரதரின் மகனுமல்ல: இராவணனைக் கொன்றவனுமல்ல ; அவன் அன்பின் சொரூபம்! உண்மையின் உருவம்" என்று விளக்கினார்: அப்போது நான். திராவிட நாடு இதழில் தீட்டினேன்- * எரியிட்டார் ! என் செய்தீர் ?'- என்று. எண்ணங் இதுபோல அவருடைய அடிப்படைக் கொள்கை களை அலசிப் பார்த்ததால்தான். அவருடைய களும் எனது இயக்கத்தின் அடிப்படை ஆசைகளுக்கு மிடையே ஒற்றுமைகளிருப்பதைக் கண்டோம். அதனால் தான் காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டதும் எனது இயக்கத் தலைவர் பெரியார். ஒரு அறிக்கை விடுத்தார். 1 "இந்த நாட்டின் பெயரை, இந்தியா என்பதற்குப் டதில் காந்தி நாடு என்றழையுங்கள் இந்து மதம் என்பதற்குப் பதில் ' காந்தி மதம்' என்று மாற்றுங்கள்— இவ்வண்ணம் செய்தால், ஏற்கத் தயார்!' என்று கூறினார். யார், முன் வந்தார்கள்? இன்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் களைக் கேட்கிறேன். யார் ஏற்றுக் கொண்டார்கள்? அதுமட்டுமா? காந்தியார் அடிக்கடி சொன்னார்- உண்மையே. என் கடவுள்' என்று, இதனை யார்