பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 கருவிகளைக் காண்கிறாய்; கைக்கொண்டவன் ஆள்கிறான்! பொன் மொழிகள் அதோ. அடிக்கிறானே கம்பு : அது ஏது தெரியுமா? நீ வெட்டித் தந்ததுதான் ! சுட்டுப் பொசுக்குகிறானே அந்தத் துப்பாக்கிகள் : அவை நீ அன்று செய்து தந்தவைதான்! காதுகளை மூடிக்கொள்கிறாயே. உழைத்து ஓடான உத்தமனே! என் பேச்சு உன் இதயத்தைச் சுட்டெரிக் கிறதா? பாவம்! நீ, என்ன செய்வாய்? உனக்கு யாரும் இந்தக் காட்சிகளைக் காட்டவில்லை, இது நாள்வரை! ஆகவேதான் இந்தக் காட்சிகளை கண்டதும் துடி கிறாய்! தொல்லை செய்வோரின் துடுக்கடக்குவேன் என்று உன் இதயம் துடிப்பது என் கண்ணுக்கு நன்றாகக் தெரி கிறது! உத்தமனே, அவசரப்படாதே! இன்னும் கொஞ்சம் ருகள்! உன்மீது சவாரி செய்யும் பிரபுக்களின் ஆணவப் பிடரியை நீ ஆட்டவேண்டும் என்பதுதான் ஆசை! எனது ஏன் இப்படி உனது கண்கள் சிவப்பேறுகின்றன? எனது வார்த்தைகள் உன் கோபாக்கினியை கிளறுகின் தனவா? மகிழ்ச்சி நண்பா. எனக்கு இரட்டை மகிழ்ச்சி! உன் இதயத்தில் எரிமலை உதயமாக வேண்டும் என்பது தானப்பா என் ஆசை! அது ஏற்பட்டுவிட்டதென்றால் என் லட்சியம் நிறைவேறும்: நிம்மதி பெறுவேன், கிளி கூண்டை விட்டுப் புறப்பட்டுவிட்டது! காளை கட்டவிழ்த் துக்கொண்டது ! வீரன் விலங்கை முறித்துக் கிளம்பி விட்டான் என்று எக்காளம் முழக்குவேன்! அதில்தான் நண்பா, உன் வாழ்வே இருக்கிறது /

  • சரி. என்னை நான் புரிந்துகொண்டேன். இப்போது என்ன செய்வது நான் ? என்னை வேதனையிலாழ்த்தியவனை