பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 உடன் பிறந்தார் இருவர் 'வரியா? ஏழைகளா? கூடாது,கூடாது! ஏழை களுக்கு இனமாகவே நிலம் தரவேண்டும் என்றான் ட்ரூசஸ். கெயஸ் கிரேக்கச்சைவீட புரட்சிகரமான திட்டங்களைத் தன்னால் புகுத்த முடியும் என்று வீம்பு பேசித்திரியலானான். கெயஸ், செனட் சபையின் விரோதத்தைக் கிளறி விட்டு விட்டான். எனவே அவன் கூறும் திட்டங்களை செனட் ஏற்காது- என் நிலையோ அவ்விதமலை. என் திட்டங்களைச் செனட்சபையும் ஏற்றுக் கொள்ளும். என்று பசப்பினான். வேறு மக்கள் மனதிலே குழப்பத்தை மூட்ட இந்தப் போக்கு ஒரளவுக்குப் பயன்பட்டது. கெயஸ் கிரேக்கஸ். மக்களுக்காக நிறைவேற்றப்படும் எந்தப் பொதுப் பணியையும் தானே முன்னின்று நடத்தி வந்தான். மக்களும் அவனது தொண்டின் மேன்மையைப் பாராட்டினார்கள் - இதையேகூட ட்ரூசஸ் திரித்துக் கூறி னான்- கெயஸ் கிரேக்கஸ் எதேச்சாதிகாரி. ஒருவரையும் நம்பமாட்டான், எல்லாம் தனக்குத்கான் தெரியும், தன்னால் தான் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் கொண்டவன். ஒருவரையும் ஒழுங்காக வேலைசெய்ய விடமாட்டான். எல்லாவற்றிலும் தலையிடுவான். தற்பெருமைக்காரன். எல்லா அதிகாரமும் தன்னி-மே வந்து குவிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டான் என்று தூற்றித் திரிந்தான். ஆப்பிரிக்காவிலே ஒரு புது மண்டிலம் அமைக்கும் பணியாற்ற கெயஸ் கிரேக்கஸ் அங்கு சென்றிருந்த சமயத் தில், ட்ரூசஸ், வேகமாக இந்த விபரீதப் பிரசாரத்கை நடத்தி வந்தான். எதிர்ப்பு முளைக்கும் வண்ணம் வதந்திகளைக் கிளப்பிக் கொண்டிருந்தான்.