பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

அதன் தலைவர்களையும், தரக்குறைவாகப் பேசி, நமது ஆதரவாளர்களின் கசப்புக்கும், வெறுப்புக்கும் ஆளாகிவிட்டன. எனவே, அடுத்த தேர்தலில் நாம் இல்லை என்றால், வாய்ப்பு சுதந்திர கட்சிக்கு என்று ஏற்படுகிறது. இது எந்த விதத்திலும், பாட்டாளி, நடுத்தர வகுப்பினருக்கு நலன் தருவதாகாது. இதுவும் ஒரு அகில இந்திய கட்சி ஆதலால், தென்னாட்டு உரிமைக்கு இதனாலும் ஒரு பயனும்