பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அன்னம் இதைக்கேள்! அவளை வடதேசம்
சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்
                                     கின்றேன்
நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர்
தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்
முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும்
ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழித்துவிடும்;
கொஞ்நாள் சென்றால் மறப்பான் குளறுபடி
நெஞ்சில் அவன்மயக்கம் நீங்கும் எனச்
                                 சொன்னான்.
அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச்
சொன்னது நன்றென்றாள் துணிந்து.

39