பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

________________

85 களை அழையாதீர்கள் என்று கூறியபோதும், என் கீர்த்திக் குக் காரணமே தமிழ்தான் என்று தோழர் தண்டபாணி தேசிகர் அகங்குளிரக் கூறியபோதும், எந்தக் கூட்டத் தார் எந்த வகுப்பார். எந்தப் பத்திரிகைக்காரர் எதிர்த்த போதிலும், தமிழர் அஞ்சத் தேவையில்லை என்று குமாரராஜா சர். முத்தையச் செட்டியார் அவர்கள் கூறியபோதும். மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த மக்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததைக் கண்டோர் அறிவர். தமிழரிடை பிறந்துள்ள புத்துணர்ச் சியை? தமிழிலே சாஹித்யம் உண்டா? உண்டு என்றனர் சொற்பொழிவாளர்கள். பாடிப் பாடிக் காட்டினர் இசைச் செல்வர்கள். கேட்டுக் களித்தனர் மக்கள். கேட்டது போதாதென மேலும் மேலும் தமிழ்ப் பாடல் கள் பாடும்படி கேட்டனர். அது போதும்; தமிழ் இசையை எதிர்க்கும் பேர்வழிகளின் கண்களைத் திறக்க! கருத்தைத் துலக்க! இந்தப் பிரச்சினை தனிப்பட்ட தென்றோ, திடீரெனத் தோன்றிய தென்றோ நாம் கருதவில்லை. இசை விஷயமாக எழுப்பிய இந்தக் கிளர்ச்சி, ஒரு மாபெருங் கிளர்ச்சியின் சிறு பகுதி, தமிழகத்திலே எழும்பியுள்ள மறு மலர்ச்சியில் ஒரு பாகம். இதனை எதிர்ப்போரின் செயலும், மறுமலர்ச்சி பைக் கண்டு மனந்தாளாது எதிர்த்தொழிக்க எண்ணும் கூட்டத்தின் கொடுமை மிக்க செயல்களில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம். எனவே, இந்தச் சமயத்தில் தமிழர் பொதுவாக உள்ள பெரியப் பிரச்சினையைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம். இன்று,தமிழருக்கு எழுச்சி, இசை விஷயமாக மட் டும் வந்தில்லை! எதிர்ப்பும் அந்தத் துறையில் மட்டும் ஏற் படவில்லை! மொழியிலே கலப்பு வேண்டாம் என்றோர் எழுச்சி.