பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402


ஒரு நாள் இரவு திடீரென்று “நாக்கால் மூக்கைத் தொட முடியுமா உங்களால்?” என்றாள். அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. “முடியாது” என்றேன்.

“முடியாதா? ஊம் ..... முடியவே முடியாதா?” என்றாள்.

“நீ தொடு பார்க்கலாம் என்றேன் நான். அழகான கூரிய முக்கு அவளுக்கு. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, சட்டென்று நாக்கை நீட்டித் தன் மூக்கின் துனியைத் தொட்டாள். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. என்னல் முடிந்த மட்டும் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்தேன். மூக்கின் பக்கத்தில்கூட நெருங்க வில்லை அது. மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். தோல்வியை சமாளிக்க வேண்டுமே, “பெண்களுக்கே நாக்கு நீளந்தான்” என்றேன். வேறு என்ன செய்வது? ...மதுரையில் அவளுக்கு இருந்த மனக் குறையை எல்லாம் வட்டியும் முதலுமாகக் கும்பகோணத்தில் தீர்த்தேன். சிவ லீலாவில் எனக்கு முக்கியமான வேடம் இல்லாத தால் திரெளபதையை முன்னுல் அனுப்பிவிட்டு நான் சாவகாச கொட்டகைக்குப் போவேன். அதில் என் மனைவிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.