பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பிள்ளை. இந்த நால்வரில் நாடக சபைக்கு அதிக முதலீடு செய்தவர் சின்னையாபிள்ளை. இவர் கம்பெனி வீட்டில் தங்குவதில்லை. அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவார். கருப்பையா பிள்ளை கம்பெனியின் கணக்கு விவகாரங்களையெல்லாம் பார்த்துக் கொள்வார். பெரும்பாலும் கம்பெனி வீட்டிலேயே தங்குவார். சுப்பிரமணிய பிள்ளை எப்போதாவது மாதத்திற்கொரு முறை வந்து போவார். பழனியா பிள்ளை ஒருவர் தான் எல்லோருடனும் நெருங்கிப் பழகக் கூடியவர். அதிலும் ஆசிரியர் சுவாமிகளிடம் ஏதாவது சொல்ல வேண்டுமானால் பழனியா பிள்ளை தான் சொல்வார். மற்ற உரிமையாளர்கள் சுவாமிகளிடம் நெருங்கவே பயப்படுவார்கள்.