பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

539


இருவரும் நாடகத்தைப் பற்றி நன்கு விவாதித்தோம். ஒரு வார காலத்திற்குள் நாடகத்தைத் திருத்தி எழுதிக்கொடுத்தார். நான் எதிர்பாராத அதிசயம் என்னவென்றால், நாடகத்திற்கான பாடல் களேயும் அவரே எழுதிக் கொடுத்தார். பாடல்கள் நன்றாக இருந்: தன. அதற்கு மெட்டுகள் அமைக்கும் பொறுப்பினே அப்போது எங்கள் குழுவில் நடிகராக இருந்த திரு ஆத்ம நாதனிடம் ஒப்படைத்தேன். ஆத்மநாதன் அப்போதே பாடல்களும் எழுது வார். அவரைப் பற்றிய விரிவான குறிப்புக்களை இரண்டாவது பாகத்தில் சொல்லவிருப்பதால் இங்கு சுருக்கிக் கொள்கிறேன். பாடல்களுக்கு ஆத்மநாதன் அமைத்திருந்த மெட்டுக்கள் அருமை யாக இருந்தன. நான் பாரதி பாடல் உரிமை சம்பந்தமாக. சென்னை செல்ல முன் கூட்டித் திட்டமிட்டிருந்ததால் புயல் நாடகத்தில் வேடம் புனைய வாய்ப்பில்லாது போய்விட்டது.

13.4-48இல் புயல் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் கதையமைப்பு நன்முக இருந்தது. நடிகர்கள் அனைவரும் திறமை. யாக நடித்தார்கள். 20 நாட்கள் நாடகம் தொடர்ந்து நடை பெற்றது. நாடகத்தை அரங்கேற்றி விட்டு 18-4-48 இல் நான் சென்னைக்குப் பயணமானேன்.

பாரதியின் விடுதலைப் பயணம்

சென்னையில் பாரதிபாடலை நாட்டின் பொதுச்சொத்தாக்கு. வது சம்பந்தமாகப் பேராசிரியர் வ. ரா., பரலி சு. நெல்லையப்பர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோரை நானும் என் ஆத்மசகோ தரர் நாரண-துரைக்கண்ணனும் சந்தித்துப் பேசினோம். எங்கள் முயற்சிகள் வெற்றிபெற அப்பெரியவர்கள் மூவரும் நல்லாசி” கூறினார்கள். அன்றிரவு நாரண - துரைக்கண்ணன் வல்லிக் கண்ணன், இருவருடனும் கடற்கரை சென்று பாரதி பாடல் விடுதலை முயற்சி பற்றி இரவு 12 மணிவரை உரையாடிக் கொண்டிருந்தோம். மறுநாள் இரவு 10.30க்கு வல்லிக்கண்ணன், நாரண-துரைக்கண்ணன், ஆகியோருடன் பாரதி விடுதலைக்காகத் திருநெல்வேலிக்கு யாத்திரை புறப்பட்டேன்...

மறுநாள்கால திருச்சிவந்து வானெலிநிலையம் சென்றோம். நிலைய எழுத்தாளர் நண்பர் கே. பி.கணபதியைப் பாரதி விடுதலை யாத்திரையில் எங்களுடன் நெல்லைக்கு வருமாறு வேண்டினோம்.