பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544


கண்ணால் பார்க்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சி காதால் கேட்கும் பொழுதோ படிக்கும் பொழுதோ ஏற்படுவதில்லை யல்லவா?

“ஒரு பொருளே, அல்லது தத்துவத்தை ஜனசமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமானல், கட்டுரை வாயிலாக, அல்லது சொற்பொழிவு மூலமாகக் கூறுவதைவிடக் கதை வாயிலாக, நாடகவாயிலாக வெளிப்படுத்துவது பெரும் பயன, அதுவும் உடனடியாகத் தருமென்பது என் கருத்து” என்று நமது தலைவர் திரு நாரண-துரைக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார். நமது புரட்சிக் கவினார் பாரதிதாசன் அவர்களும்,

“ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும், பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்த பிடியில் பிடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்” என்று கூறுகிறார். முடிவில் “எந்தன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்” என்று முடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இது. இன்று தமிழ் நாடக உலகம் பூரணமாகப் பயனுள்ள வழியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது துறையில் உச்சநிலையடைய வேண்டு மென்றால்,அவன் ஒரு நாடகாசிரியகை முயற்சிக்கவேண்டும்.அப் போதுதான் பூரணத்வம் பெறுகிறான் என்பது அறிஞர்கள் முடிவு.

நாடகாசிரியனுக ஆகும்போதுதான் எழுத்தாளனின் கற்பனைகள் கருத்துக்கள் எல்லாம் பொது மக்களுக்கு நன்கு பயன்படுகின்றன. ஷேக்ஸ்பியர் மகாகவிதான். ஆனால், நாடகாசிரியர் என்ற பெருமைக்குள்தான் அவரது கவிதா சக்தி அடங்கி யிருக்கிறது. வங்காளக் கவினார் துவிஜேந்திரலால்ராய் அவர்கள் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் புகுந்திருந்தாலும் நாடக ஆசிரியர் என்றே மக்களால் அழைக்கப்படுகிரு.ர். பேரறினார் பர்னட்ஷா அவர்கள் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் பிரபல நாடாகாசிரியர் பர்னட்ஷா என்றே அழைக்கப்படுகிறார். நாம் வெகுதூரம் போகவேண்டாம். தோழர் அண்ணாத்துரை அவர்கள் நாடகாசிரியரான பிறகுதான் அறிஞர்