பக்கம்:எனது பூங்கா.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆசிரியர்

பொ. திருகூடசுந்தரம், எம்.ஏ. பி.எல்.

1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற்பரிசு பெற்றார். எம். ஏ. இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்தி இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகர சபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத் துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பத்து நூல்களும் மொழி பெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெறவிரும்புவோர். படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்குப் பரிசு அளித்துள்ளார். சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் எல்லோருக்கும் விளங்குமாறு எழுதக் கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையமுடையவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/3&oldid=1258850" இலிருந்து மீள்விக்கப்பட்டது