பக்கம்:எனது பூங்கா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது பூங்கா

 ந்தத் தலைப்பைக்கண்டதும் என்நிலைமையை நன்கு அறியும் நண்பர்கள் "இவரிடம் பூங்காவா? எப்பொழுது பெற்றார் ? ஏதேனும் ஒரு பூச்செடி வளர்க்க ஆரம்பித்திருக் கிறாரா? அதைத்தான் இங்கே எனது பூங்கா என்று பீத்திக் கொள்ள எண்ணுகிறாரா? அல்லது பொருளுடையோர் வைத்திருக்கும் பூங்காக்களைக் கண்டு உண்டாகும் அழுக் காற்றுக்குப் போக்குக் கொடுப்பதற்காக இப்படி எழுத எண்ணுகிறாரோ?” என்று கூறக்கூடும். இதற்கு என்ன பதில் கூறுவது?
 "நான் பட்டினியா யிருந்தாலும், என் உணவு வாங்க மட்டுமே காசு இருப்பினும் நான் பூவைக் கண்டால் உணவை வாங்காமல் பூவையே வாங்குவேன் ” என்று மகமது நபி கூறினாராம்.
 இவருக்குப் பூவிலுள்ள இத்தனை ஆசையைக் கண்ட தும் நான் இவர் என்ன தமிழர்தானே என்று அடிக்கடி எண்ணுவதுண்டு. தமிழர்களுக்குப் பூவிலுள்ள ஆசை உலகில் வேறு எந்த இனத்தாருக்கும் கிடையாது என்று உறுதியாகக் கூறலாம். தமிழர்கள்தான் கடவுளுக்கு மல

—9–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/8&oldid=1298910" இலிருந்து மீள்விக்கப்பட்டது