பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xII

மதிப்பையும்‌ பெற்றார்கள்‌. ஆங்கிலம்‌ சிறிதும்‌ அறியாவிட்டாலும்‌, ஆண்டில்‌ இளைஞராக இருந்தாலும்‌, அவர்களுடைய புலமையும்‌, பண்பும்‌ மாணாக்கர்களும்‌ ஆரியர்களும்‌ பிறரும்‌ இவர்களைச்‌ சிறந்தவர்களாக மதிப்பதற்குரிய காரணங்களாக இருந்தன.

காலேஜில்‌ ஆரரியராகப்‌ புகுந்த ஆண்டிலேயே (அக்டோபர்‌ மாதம்‌) ஐயரவர்களுக்கும்‌ கும்பகோணத்தில்‌ ஜில்லா முன்சிபாக இருத்த சேலம்‌ இராமசுவாமி முதலியாரவர்களுக்கும்‌ பழக்கம்‌ உண்‌டாயிற்று. அந்தப்‌ பழக்கமே ஐயரவர்கள்‌ பிறந்ததன்‌ பயனைத்‌ தமிழுலகத்துக்குக்‌ கிடைக்கும்படி செய்யக்‌ காரணமாயிற்று, முதலியார்‌ சிந்தாமணியைப்‌ பாடம்‌ சொல்லும்படி ஐயரவர்களிடம்‌ கேட்டுக்கொண்டார்‌. அதனை முன்பு பாடம்‌ கேட்டறியாதவர்கள்‌ இவர்கள்‌; அந்த நூலைப்‌ பார்த்தது கூட இல்லை. ஆயினும்‌ தைரியமாகப்‌ பாடம்‌ சொல்லப்‌ புகுந்தார்கள்‌. ஏட்டுச்‌ சுவடியை வைத்துக்கொண்டு பாடம்‌ சொன்னார்கள்‌. சிந்தாமணியில்‌ ஆழ்ந்தார்கள்‌. தாம்‌ அதுகாறும்‌ படித்த நூல்‌ குவியல்களால்‌ அறியவொண்ணாத பலவற்றை அதில்‌ கண்டார்கள்‌. அது ஜைன சமய நூலாதலால்‌ பல செய்திகள்‌ ஐயரவர்களுக்கு விளங்கவில்லை. அவற்றையெல்லாம்‌ ஜைனர்களிடம்‌ சென்று கேட்டு அறிந்தார்கள்‌. சிந்தாமணிக்கு நச்சினார்க்னியர்‌ எழுதிய உரையைப்‌ படித்தார்கள்‌. அவருடைய உரைப்போக்கும்‌ அதனிடையே அவர்‌ காட்டியிருக்கும்‌ மேற்கோள்களும்‌ ஏதோ ஒரு புதிய பிரபஞ்சத்தையே அவர்கள்‌ அகக்கஈண்முன்‌ தோற்றுவித்தன.

தமிழ்‌ மக்கள்‌ செய்த தவத்தின்‌ பயனாக இவர்களுக்குச்‌ சிந்தாமணியைப்‌ பதிப்‌பிக்கவேண்டும்‌ என்னும்‌ எண்ணம்‌ உண்டாயிற்று. ஆராய்ச்சி நடைபெற்றது. மேட்டுமடையில்‌ நீர்‌ பாய்வது போன்ற வேதனையைப்‌ பல சமயத்தில்‌ அவர்கள்‌ அடைந்தார்கள்‌. ஆனாலும்‌ விடாப்பிடியாக முயன்று, 1887ஆம்‌ ஆண்டு சிந்தாமணியை வெளியிட்டார்கள்‌. அந்தப்‌ பதிப்பைக்‌ கண்ட தமிழ்‌ நாட்டினர்‌ மிகவும்‌ ஆனந்தமடைந்து களிக்கூத்தாடினர்‌. அதுமுதல்‌ ஐயரவர்கள்‌ பழைய நூல்களைப்‌ பதிப்பித்து வெளியிடும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டார்கள்‌.

சித்தாமணிக்குப்பின்‌ பத்துப்பாட்டு வெளியாயிற்று. அதன்பின்‌ சிலப்பதிகாரம்‌, புறநானூறு, மணிமேகலை, என்பவை வந்தன. புறநானூறு கண்ட தமிழுலகம்‌ ஏதோ ஒரு புதிய கண்டத்தைக்‌ கண்டு பிடித்தது போன்ற மகிழ்ச்சியையும்‌ ஊக்கத்தையும்‌ அடைந்தது. ஆராய்ச்‌சிக்காரர்களுடைய மூளை வேலை