426
என் சரித்திரம்
1. இனியதமிழ் நாடெங்கு மிங்கிலீசு பரவிதமிழ்க்
கேற்ற மின்றிக்
கனியகன்ற மாபோலக் கைவிடப்பெற் றிருப்பதையான்
கண்டாற் றாது
முனியினுருக் கொண்டவுன்றன் முன்றிலிடை முத்தமிழும்
முழங்கு மென்றே
தனியுறுசுப் பிரமணியத் தேசிகா நினையன்று
தரிசித் தேனே.
[மா - மாமரம். தனி - ஒப்பற்ற பெருமை]
2. தரிசித்த வன்றுகண்டேன் றமிழ்மடந்தை தளிர்த்துலகில்
தன்பேர் நாட்டிப்
பரிசுபெற நினையடைந்து பலவாறாய் முயல்வதுவும்
பாரின் மன்னர்
தரிசிகா மணியேநீ தமிழ்மயிலைக் காப்பதுவும்
தமிழர் யார்க்கும்
பொருவில்பாண் டியன்சோழன் சேரனென வயங்குமுனைப்
புனித னென்றும்.
[‘பரிசு - உலகத்தில் சிறந்த பாஷையென்று மெச்சப்படுவதாகிய பரிசு’ (பட்டாபிராம பிள்ளையின் குறிப்பு.) பொரு - ஒப்பு.]
3. அகராதி தமிழிலிணை யற்றதென் வியப்புறவொன்
றான்றோர் யாரும்
பகராதி ருத்தலினிப் பாரிலுள தமிழ்மடப்பண்
ணவர்கட் கெல்லாம்
நிகராதி ருக்குநெடும் பழியென்று முன்புகன்று
நெடிய சீட்டுத்
தகராதி ருக்குமொரு சிறுகுழையி லிட்டனுப்பித்
தளர்வாய் நின்றேன்.
[மடப்பண்ணவர் - மடாதிபதிகள். பட்டாபிராம பிள்ளை அகராதி எழுத வேண்டுமென்ற வேண்டுகோளை எல்லா மடாதிபதிகளுக்கும் அனுப்பினாரென்று தெரிகின்றது. சீட்டு - கடிதம்.]
4. தளர்ந்துருகிச் சமுசயத்தா லாற்றேனாய்த் திருமுகத்தைத்
தரிசித் தேன்காண்
வளர்ந்தோங்கு மதியுடையாய் ஞானிகட்கோர் தாயகமே
வள்ள லேயுன்