புறநானூற்றுப் பதிப்பு
741
செய்யுட் கடிதம்
அவர் இராமநாதபுரம் சென்றவுடன் எனக்கு ஒரு செய்யுட் கடிதமும் ஐந்நூறு ரூபாய்க்கு ஓர் உண்டியலும் 17-12-1894 அன்று எனக்கு அனுப்பினார். அக்கடிதத்திற் சில பகுதிகள் வருமாறு.
(கலி வெண்பா)
1. “திங்கள் புரையுந் திருவதனச் செல்வியொரு
பங்கினமர் பெம்மான் பதமலரே - துங்க
2. முடிக்கணியாத் தாங்கி முதுபரவை வேலிப்
படிக்கணியா யென்றும் பலநூல் - வடிக்கும்
3. உளத்தார்க் கொருநிதியா யோங்குபுகழ் மேய
வளத்தா லுயர்குடந்தை மன்னித் - துளக்கரிய
4. நேமிநா தன்மருகி நேயமனையா ளோடுவாழ்
சாமிநா தைய தகுநண்ப - மாமுகவை
5. மன்னியபாண்டித்துரைபல் வந்தனஞ்செய் தின்றெழுதும்
நன்னிருப மீதாம்..............
6. காமாரி தந்தவிளங் காதலனே ராய்த்தமிழின்
மாமாரி பெய்துலகை வாழ்விப்போய்.......
ஃ
ஃ
ஃ
7. பயன்சிறிய தேனும் பனையளவாக் கொள்வர்
நயன்றெரிவோ ரென்றவுண்மை நாடி - முயன்றிதுபோ
8. தைந்நூறு ரூபா வனுப்பினனஃ தேற்றருள்வாய்
மெய்ந்நூ றுரீஇயொழுகும் வித்தகா - மைந்நூறி
9. ஆமாலை யிற்சுவையுண் டாக்கும் புறப்பொருள்வெண்
பாமாலை யச்சிற் பதிவுசெயும் - மாமுயற்சி
10. ஊறிகந்து முற்ற லுறுவிப்பா னோங்குகவான்
ஆறுகந்த சென்னியருள்.”
1. செல்வி - உதாதேவியார், பெம்மான் - சிவபெருமான். 2. முதுபரவை வேலிப்படிக்கு - பழைய கடலாகிய எல்லையையுடைய பூமிக்கு. வடிக்கும் - இயற்றும். 4. நேமிநாதன் மருகி - திருமாலுக்கு மருமகளாகிக் கலைமகள். நேய மனையாள் - அவனுக்கு அன்புள்ள மனையாளாகிய திருமகள். முகவை -இராமநாதபுரம். 6. காமாரி - சிவபெருமான். 7. காதலன் - முருகக்டவுள். 8. மெய்ந்-