பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

名翁盛 லா, ச. ராமாமிருதம்

உள் ப்ரகாரத்துள் ஆவலுடன் ஓடினாள்.

  • அப்பா! அப்பா; அலறல் கேட்டு குருக்கள் உள்ளே

ஓடினார்.

  • அப்பா, அப்பா அவரைக் காணோமே! -இரண்டு கைகளையும் விரித்தவண்ணம் அவள் கதறுகையில், பிரமிக் கத்தக்க அழகில் பொலிந்தாள்.

ஐயர் எட்டிப் பார்த்தார். கர்ப்பக்ருஹத்தில் லிங்கத் தைக் காணோம்,

  • ஆண்டவா, ஆண்டவா! கதறிக்கொண்டே வெளியே

ஓடினாள் குருக்களும் கத்திக்கொண்டே தொடர்ந்தார்.

  • இங்கே லிங்கம் இல்லை. அம்மன் சன்னதியில், மத்யானத்தி லிருந்தே மூலவர் இல்லை. ஐயோ என்ன செய்வேன்!"

என்ன செய்வேன்! என்ன செய்வேன்: அழுது கொண்டே, தன்னை அழுத்திய துக்கத்தைத் திமிறிக் கொண்டு குருக்கள் விழித்தெழுந்தார், உடல் பூரா வேர்வை ஸ்நானம், கண்ணைக் கசக்கிக்கொண்டார். எழுந்து உட் கார்ந்தார். கனவின் பீதி தெளியவில்லை. இருக்கிறாளா? இருந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தார்.

கர்ப்பக்ருஹத்தில், சந்து வழி, சாய்வாட்டில், அவள் முகத்தில் நிலாவின் வியாபகத்தில் சிரித்துக்கொண் .டிருத்தாள். இ

இந்தியா டுடே